<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
	<channel>
		<title>தமிழ் பித்தன்</title>
		<link>http://tamilpittan.ucoz.org/</link>
		<description>Blog</description>
		<lastBuildDate>Sat, 07 Nov 2015 21:30:19 GMT</lastBuildDate>
		<generator>uCoz Web-Service</generator>
		<atom:link href="https://tamilpittan.ucoz.org/blog/rss" rel="self" type="application/rss+xml" />
		
		<item>
			<title>கட்ட பொம்மு</title>
			<description>&lt;p style=&quot;margin: 1em 0px; color: rgb(102, 102, 102); font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.08px;&quot;&gt;ஒருவர் இல்லை இருவர் இல்லை மாறாக பல குடும்பங்கள் சிதைந்து ஓடக் காரணமாக இருந்தவன் ராஜ கம்பளத்தான் வடுக வந்தேறி கெட்டிபொம்மு நாயக்கன் ஆவான். தமிழர்களில் அவர்களால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சாணார்கள் என்றழைக்கப் பட்ட நாடார்கள் ஆவார்கள். பாமினி சுல்த்தான்களை எதிர்த்து போராட வக்கின்றி தமிழகத்தில் நுழைந்த இந்த வடுகக் கூட்டம் தமிழர்களின் சாதிய மோதல்களை முதலீடுகளாக்கி குளிர் காய்ந்து பின்பு தமிழர்களையே வீழ்த்தியது. சீரிய பண்புகள் நிறைந்த தமிழ் சமூகத்தை முதல் கட்டத்தில் சிதைத்தது பார்ப்பனர் கூட்டம், அதன் பின்பு தமிழர் இனவொற்றுமையை நிர்மூலமாக்கியது வடுகரின் தெலுங்குக் கூட்டம். நிற்க.&lt;/p&gt;

&lt;p style=&quot;margin: 1em 0px; color: rgb(102, 102, 102); font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.08px;&quot;&gt;சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார்கள் பதினேழாம் நூற்றாண்டில் வணிகத்தில் தங்களது ஆளுமையை செலுத்திய போது பாளையக்கார வடுகர்கள் அவர்களது வளர்ச்சிக...</description>
			<content:encoded>&lt;p style=&quot;margin: 1em 0px; color: rgb(102, 102, 102); font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.08px;&quot;&gt;ஒருவர் இல்லை இருவர் இல்லை மாறாக பல குடும்பங்கள் சிதைந்து ஓடக் காரணமாக இருந்தவன் ராஜ கம்பளத்தான் வடுக வந்தேறி கெட்டிபொம்மு நாயக்கன் ஆவான். தமிழர்களில் அவர்களால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சாணார்கள் என்றழைக்கப் பட்ட நாடார்கள் ஆவார்கள். பாமினி சுல்த்தான்களை எதிர்த்து போராட வக்கின்றி தமிழகத்தில் நுழைந்த இந்த வடுகக் கூட்டம் தமிழர்களின் சாதிய மோதல்களை முதலீடுகளாக்கி குளிர் காய்ந்து பின்பு தமிழர்களையே வீழ்த்தியது. சீரிய பண்புகள் நிறைந்த தமிழ் சமூகத்தை முதல் கட்டத்தில் சிதைத்தது பார்ப்பனர் கூட்டம், அதன் பின்பு தமிழர் இனவொற்றுமையை நிர்மூலமாக்கியது வடுகரின் தெலுங்குக் கூட்டம். நிற்க.&lt;/p&gt;

&lt;p style=&quot;margin: 1em 0px; color: rgb(102, 102, 102); font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.08px;&quot;&gt;சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார்கள் பதினேழாம் நூற்றாண்டில் வணிகத்தில் தங்களது ஆளுமையை செலுத்திய போது பாளையக்கார வடுகர்கள் அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர். தமிழர்களான மறவர்களையும், வெள்ளாளர்களையும் சாணார்களுக்கு எதிராக களமிறக்கினர். இப்படியான பணியினை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கார வடுகனான கெட்டி பொம்மு நாயக்கன் செவ்வனே செய்து வந்தான். இவனால் தான் சாணார்களுக்கும் மறவர்களுக்கும் பகையே மூண்டது. இவனின் தம்பியான ஊமைத்துரை என்ற துரைசிங்க நாயக்கனால் சாணார்கள் குறிவைத்து தாக்கப் பட்டனர்.&lt;/p&gt;

&lt;p style=&quot;margin: 1em 0px; color: rgb(102, 102, 102); font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.08px;&quot;&gt;நாடார்களை கோவில்களுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று ஓலைகளை சக பாளையங்களுக்கு அனுப்பி கேவலப்படுத்தியவன் கெட்டி பொம்மு ஆவான். இவனால் தாலியறுத்த சாணார் குலப் பெண்டிர் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இதனால் சாணார்கள் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் இருந்து எட்டையாபுரம் பாளையம் வந்தது வரலாறு. குடித்து கும்மாளமடித்து வாழ்ந்த எட்டப்ப நாயக்கரால் சாணார்களுக்கு பாதுகாப்பு கிட்ட வில்லை. எனவே பெரும் எண்ணிக்கையிலான சாணார்கள் கமுதி, வலையபூக்குளம், பேரையூர், நீராவி, பெருநாழி, கண்ணிராஜபுரம், சாயல்குடி, குளத்தூர், பேரிலோவன்பட்டி, வேம்பார், வேடநத்தம், பனையூர், வடமலாபுரம், பூசனூர், மாவிலோடை,மார்த்தாண்டம்பட்டி, செமப்புதூர், வேப்பலோடை, தருவைக்குளம், காட்டுநாயக்கன்பட்டி, நாகலாபுரம், மேல்மாந்தை, ஆற்றங்கரை, கல்லூரணி போன்ற கெட்டிபொம்மு நாயக்கனுக்கு அடிபணியாத ஜமீன்களில் குடியேறினர். இருப்பினும் நாடார்களைக் கண்டாலே எரிச்சலுற்ற வடுகர்கள் அவர்களை பாளையம் பாளையமாக துரத்தி அடித்தனர். கெட்டி பொம்முவை தூக்கிலிட்டபோது நாடார்கள் தங்களது ஊர்களில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். சாணார் பெண்கள் குலவையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படி ஊர் ஊராக வடுகர்களால் துரத்தியடிக்கப் பட்ட ஏதிலிகளான நாடார்கள் இன்று துளி கூட வரலாறு அறியாது விழிப்புணர்வு அற்ற நிலையில் உண்பதும் உறங்குவதுமாக இருக்கின்றனர். இவனையும் இவனது வம்சத்தாரையும் என்றுமே நாடார்களால் மன்னிக்கவே முடியாது.&lt;/p&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2015-11-08-12</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2015-11-08-12</guid>
			<pubDate>Sat, 07 Nov 2015 21:30:19 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>திராவிட மற்றும் இந்திய தேசிய இயக்க இதழ்களின் வெற்றி தோல்விகள்</title>
			<description>&lt;p style=&quot;font-family: Times; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;text-align: justify; line-height: 22px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;சாவித்திரி கண்ணன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;&lt;font size=&quot;3&quot; style=&quot;font-size: 12pt; &quot;&gt;திராவிட இயக்க இதழ்கள்&lt;/font&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;திராவிட இயக்கங்கள் சாதாரண மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சாத்தியப்படுத்தும் சக்தி கொண்டவைகளாக வெளிவந்தன. மன்னர் ஆட்சி மகாத்மியங்களிலும், நிலப்பிரபுக்களின் அதிகாரவரம்புக்குள்ளும், புராணங்கள் இதிகாசங்கள் தோற்றுவித்த மயக்கங்களிலும் இந்திய தேசபக்த வெறியிலும் உழன்று வந்த தமிழ்ச் சமூகம் திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புதிய சமூக சிந்தனைகளைக் பெற்றத...</description>
			<content:encoded>&lt;p style=&quot;font-family: Times; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;text-align: justify; line-height: 22px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;சாவித்திரி கண்ணன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;&lt;font size=&quot;3&quot; style=&quot;font-size: 12pt; &quot;&gt;திராவிட இயக்க இதழ்கள்&lt;/font&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;திராவிட இயக்கங்கள் சாதாரண மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சாத்தியப்படுத்தும் சக்தி கொண்டவைகளாக வெளிவந்தன. மன்னர் ஆட்சி மகாத்மியங்களிலும், நிலப்பிரபுக்களின் அதிகாரவரம்புக்குள்ளும், புராணங்கள் இதிகாசங்கள் தோற்றுவித்த மயக்கங்களிலும் இந்திய தேசபக்த வெறியிலும் உழன்று வந்த தமிழ்ச் சமூகம் திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புதிய சமூக சிந்தனைகளைக் பெற்றது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;படிப்பையும் அதன் பலன்களையும் ஒரு குறிப்பிட்ட சமூகமே குத்தகை எடுத்துக் கொண்டாட்டங்களை அனுபவித்து வந்த சூழலை பிரிட்டிஷ் ஆட்சி மாற்றியது. பிராமண சமூகம் தவிர்த்து மற்ற சமூகங்களிலும் படித்தவர்கள், பண்டிதர்கள் உருவாயினர். ஆயினும் மூன்று சதவிகிதத்தினரான பிராமணர்களே பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரமையப் பதவிகளில் 93 சதவிகிதத்தை ஆக்கிரமித்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இதன் எதிர்வினையாக திராவிட இயக்கத்தின் முதல் நாளிதழாக 1914இல் வெளிவந்தது &quot;திராவிடன்&quot;. திராவிடன் ஏற்றிய தீப்பந்தம் பல தீபங்களை ஒளிவீசச் செய்தது. திராவிட இயக்கத்தின் தாக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்களையும் வெகுஜன இதழ்களையும் பிரசவித்தது. 1916இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிராமணரல்லாதார் இயக்கம் என்ற பெயரில் பேசப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் &quot;ஜஸ்டிஸ்&quot; என்ற ஆங்கில இதழ் வெளிவந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்த இதழின் பெயரே இவ்வியக்கத்தின் பெயராக &quot;ஜஸ்டிஸ் கட்சி&quot; என்றும் &quot;நீதிக்கட்சி&quot; என்றும நிலைப் பெற்றது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1925இல் முதன் முதலில் குடிஅரசு பத்திரிகையை இந்திய தேசியத்திற்கான இதழாகக் கொண்டு வந்த பெரியார், காங்கிரசிலிருந்து விலகியபிறகு அதனை திராவிட மக்களுக்கான சுயமரியாதை இதழாக நடத்தினார். வியாபார நோக்கமின்றி கொள்கைக்காக வெளியான குடியரசு இதழ் ஆயிரத்து சொச்சம் சந்தாதாரர்களைப் பெற்று, தொடர்ந்து பொருளாதார சங்கடங்களிலே எட்டாண்டுகள், தின, வார, மாத, இதழ் என மூன்று வடிவங்களில் நடத்தப்பட்டு, அரசு அடக்கு முறையால் நின்றுபோனது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;நீதிக்கட்சியின் திராவிடன் இதழை பொறுத்தவரை அதற்கு நிலப்பிரபுக்கள், தொழிலதிபர்கள் உதவி கிடைத்தது. ஆளும் கட்சி ஆன நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் புரவலர்களாக இருந்து வளர்த்தார்கள். இப்படி இலட்சக் கணக்கில் பணத்தை விழுங்கிய நிலையிலும் &quot;திராவிடன்&quot; ஒரு திடகாத்திரமான இதழாக சொந்தக்காலில் நிற்க முடியாத ஒன்றாகவே இருந்தது. நீதிக்கட்சியாரின் வற்புறுத்தலினால் நடுவே சில காலம் பெரியார் இவ்விதழுக்கு பொறுப்பேற்று பல்லாயிரக்கணக்கில் பணம் இழந்தது தான் கண்ட பலனாயிருந்தது. ஆகவே அப்பொறுப்பிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இதேபோல திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக பிராமணர்கள் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதி அவை அகில இந்திய அளவில் கவனம் பெற்றுவருவதை அறிந்த பெரியார் 1928இல் ரிவோல்ட் (Revolt) என்ற ஆங்கில இதழை ஆரம்பித்தார். அறிவுக் களஞ்சியமாக, புரட்சியின் அம்சமாக வெளியானது ரிவோல்ட். இதில் டாக்டர் முத்து லெட்சுமி, செல்வி குஞ்சிதம், செல்வி ஞானம், செல்வி இந்திராணி போன்ற பெண்கள் எழுத்துலகில் பிரவேசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இரண்டாண்டு வீச்சுக்குப் பிறகு ரிவோல்ட் நின்றுவிட்டது. மீண்டும் 1933-இல் &quot;புரட்சி&quot; என்ற பெயரில் பெரியார் ஒரு பத்திரிகை தொடங்கினார். கடுமையான அரசாங்க அடக்குமுறையால் ஓராண்டிற்குள்ளேயே மூன்று முறை &quot;புரட்சி&quot; இதழ் முடக்கப்பட்டது. நீதிமன்றம், வழக்கு, ஜாமின் அபராதம் என அலைக்கழிக்கப்பட்ட புரட்சி ஓராண்டு காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;ஒன்றரை அணா விலையில் &quot;பகுத்தறிவு&quot; என்ற பெயரில் பெரியார் கொண்டு வந்த மாத பத்திரிகை &quot;குடி அரசு&quot;ம், &quot;புரட்சி&quot;யும் விட்டுச் சென்ற பணிகளை முன்னிலும் வீரியத்துடன் முன்னெடுத்தது. இதில் அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி போன்றோரின் கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. நான்கைந்து ஆண்டுகள் பகுத்தறிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இதழ்களின் விற்பனையில் பெரும் அக்கறை காட்டினாலும், விற்பனையை வைத்து இதழ் பணியையோ, எழுத்துப் பணியையோ நிர்ணயித்துக் கொள்ளவில்லை பெரியார். &quot;நான் எழுதியதை நானே அச்சுகோத்து நானே அச்சிட்டு நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் &quot;குடி அரசை&quot; வெளியீட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை&quot; என பிரகடனப்படுத்தியவர் பெரியார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;நின்று போன குடிஅரசு இதழை 1935இல் மீண்டும் துவக்கினார் பெரியார். இம்முறை சுமார் 14 ஆண்டு குடியரசு தாக்குபிடித்து கோலோச்சியது. நீதிக்கட்சிக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட &quot;விடுதலை&quot; வாரம் இருமுறை இதழ் 19 மாதங்களுக்குப் பிறகு பெரியார் கைக்கு வந்தது. முதலில் அரையணா விலையில் விற்பனையான விடுதலையை நாளிதழாக மாற்றி காலணா விலைக்குத் தந்தார் பெரியார். சரியாகச் சொல்ல வேண்டுமானால் மூன்று சல்லிக்காசுகள், 1973இல் பெரியார் மறைந்த போது விடுதலை நாளிதழ் விலை 12 காசுகளே.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;விடுதலை நாளிதழுக்கு மணியம்மையாரை ஆசிரியராகவும் குத்தூசி குருசாமி அவர்களை பொறுப்பாசிரியராகவும் கொண்டு பெரியார் நடத்தினார். அறிஞர் அண்ணாவும் சில காலம் இதன் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இக்காலங்களில் விடுதலை சுமார் 44,000 பிரதிகள் விற்பனையைத் தொட்டது. அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி தி.மு.க. தொடங்கிய காலத்தில் விற்பனை சரிபாதியாக சரிந்தது. 1958இல் &quot;நாத்திகம்&quot; என்ற பெயரில் வெளியான வார இதழ் பெரியார் கொள்கை விளக்க ஏடாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இது காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்தும், தி.மு.க.வை எதிர்த்தும் பரபரப்போடு வெளியாகி சுமார் 75,000 பிரதிகள் வரை விற்பனை வளர்ச்சி அடைந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1975இல் வே.ஆனைமுத்து அவர்களால் &quot;சிந்தனையாளன்&quot; மாத இதழ் பெரியார் சிந்தனைகளைத் தாங்கி கொண்டு வரப்பட்டது. பெயருக்கு ஏற்றார்போல் தீவிர சிந்தனைத் தளத்தில் செயல்பட்டுவரும் இவ்விதழ் இடையே சில பொருளாதார நெருக்கடிகளால் சிறிது காலம் தடைப்பட்டாலும் இன்றளவும் சுமார் 4,000 பிரதிகளோடு வெளிவந்து கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இவை தவிர பெரியார் குரல், பெரியார் சிந்தனை என்று பெரியார் பெயரைத் தாங்கி வந்த வரிசையில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. திராவிட அரசு, திராவிட ஏடு போன்று திராவிடத்தை தாங்கி சுமார் முப்பது பத்திரிகைகள் வெளி வந்துள்ளன &quot;தமிழ்&quot; என்ற பெயரை அடியொற்றி தமிழ் அமிழ்தம், தமிழ் இன்பம், தமிழ் உலகம் என்பதாக நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வந்தன.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;கொள்கை சார்ந்து இயக்கங்கள் செயல்பட்ட காலகட்டத்தில் அந்தந்த கொள்கைகளால் &quot;பற்றிக் கொள்ளும் நெருப்பு&quot; போல இருந்த தொண்டர்கள் படையை வழிநடத்த இயக்க இதழ்கள் வெளிவந்தன.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;அந்தந்த இயக்க இதழ்களை படிப்பதற்கென்றே கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை கட்சி அமைப்புகள் &quot;மன்றம்&quot;, &quot;பாசறை&quot;, &quot;படிப்பகம்&quot;, &quot;அறிவகம்&quot; போன்ற பெயர்களில் கூரைவேய்ந்த சிறு அறைகளில் இயக்க இதழ்களை வாங்கி வைத்து படித்து விவாதித்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்த இயக்க இதழ்கள் பற்பல பிரச்சினைகளில் தங்கள் இயக்கத்தின் நிலைபாட்டை தொண்டர்களுக்கு உணர்த்தவும், எதிர்கொள்கை கொண்ட இயக்கத்தவர்களின் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக் காட்டவும் பயன்பட்டன. குறிப்பாக எதிர் நிலையிலுள்ள கட்சிகளின் குற்றங்களை, தவறுகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;திராவிட இயக்க இதழ்கள் பெரும்பாலும் அதன் முன்னணி தலைவர்களாலே நடத்தப்பட்டன. அறிஞர் அண்ணா &quot;திராவிட நாடு&quot;, &quot;ஹோம்லேண்ட்&quot;, &quot;காஞ்சி&quot; போன்ற இதழ்களையும், கலைஞர் கருணாநிதி &quot;முரசொலியையும், பேராசிரியர் க.அன்பழகன் &quot;புதுவாழ்வு&quot; என்ற இதழையும், நாவலர் நெடுஞ்செழியன் &quot;மன்றம்&quot; என்ற இதழையும் சி.பி.சிற்றரசு &quot;தீப்பொறி இதழையும் என்.வி. நடராஜன் &quot;திராவிடர்&quot; இதழையும் கவிஞர் கண்ணதாசன் &quot;தென்றல்&quot; இதழையும் ஒரே காலகட்டத்தில் நடத்தினார்கள். 1959-இல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி &quot;தனி அரசு&quot; இதழைக் கொண்டுவந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக வந்த &quot;நம்நாடு&quot; இதழுக்கு முதலில் கலைஞர் அண்ணா ஆசிரியராகவும் பிறகு நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, இரா.செழியன் போன்றவர்கள் ஆசிரியராகவும் இருந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக 1953முதல் 1972வரை தான் நம்நாடு வெளிவந்தது. லாபகரமாக நடத்த முடியாத நிலையில் தொடர்ந்து நஷ்டப்படத் தயாரின்றி நம்நாடு 1972 டிசம்பரில் நின்றுவிட்டது. இந்த நம்நாடு இதழை மீண்டும் வரை இதழாக 1978இல் கருணாநிதி ஆரம்பித்து தி.மு.க.வின் வார ஏடு என அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆயினும் வெற்றிகரமாக இதனைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தி.மு.க. ஆட்சியைப்பிடித்தது. செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. ஆயினும் அது எந்த கொள்கையைப் பேசி வந்ததோ அதிலிருந்து விலகியது. நீர்த்துப் போனது என்பதற்கு அவ்வியக்கத்தின் இதழியல் தோல்விகளே சாட்சிகளாகின்றன.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்நிலையில் 1977இல் திரு.கே.பி. கந்தசாமி &quot;தினகரன்&quot; என்ற பெயரில் தி.மு.க.வை ஆதரிக்கும் ஜனரஞ்சகமான நாளேடு ஒன்றை ஆரம்பித்தார். இந்த பத்திரிகையின் துவக்கவிழாவை கருணாநிதியைக் கொண்டே நடத்தினார். இந்த நாளேட்டில் தி.மு.க. தலைவரின் செய்திக்குப் பெரும் முக்கியத்துவம் தந்ததோடு காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர் போன்றவர்களின் அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றையும் கே.பி.கந்தசாமி பிரசுரித்தார். தி.மு.க.வின் ஐம்பெருந்தலைவர்களாலும் கலைஞர் கருணாநிதியாலும் பெற முடியாத வெற்றியை கே.பி.கந்தசாமி பெற்றார். சுமார் மூன்று லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகுமளவுக்கு தினகரன் வீரியத்துடன் வெளியானது. தி.மு.க. ஆதரவு மனப்போக்குள்ளவர்களால் தான் தினகரனுக்கு இந்த வெற்றி கிடைத்தது. கட்சி செய்தியை மட்டுமின்றி &quot;தினத்தந்தி&quot; பாணியில் பொதுவான செய்திகளையும் குறையில்லாமல் படிக்கும் வாய்ப்பு தினகரன் வாசகர்களுக்கு வழங்கப்பட்டதே தினகரனின் வெற்றிக்கு காரணமாகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;கலைஞர் கருணாநிதி வல்லமை மிக்க எழுத்தாளராக, பேச்சாளராக, செல்வாக்கான தலைவராக அறியப்பட்ட நிலையிலும், சினிமாவின் செல்வாக்கு அவருக்கு சேர்ந்த போதிலும், திராவிட இயக்க சிந்தனை போக்குள்ள, தொண்டர்களும் திரளாக இருந்த நிலையிலும் முரசொலியை அவரால் இன்றுவரை வெற்றிகரமான இதழாகக் கொண்டுவர முடியவில்லை. இடையே, &quot;பெரும் பொருளாதாரச் சுமை ஏற்பட்டு விட்டது முரசொலியை நிறுத்தப் போகிறேன்&quot; என அவர் ஓர் அறிவிப்பு வெளியிட அதைத் தொடர்ந்து பெரும் நிதியை கட்சிக்காரர்கள் திரட்டித்தந்து முரசொலிக்கு புத்துயிர் தந்தனர். தி.மு.க. ஆட்சியில் முரசொலிக்கு கிடைத்த அரசு விளம்பரங்கள் அவ்விதழை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்தியது என்று சொல்ல வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;அறிஞர் அண்ணா தொடங்கி நெடுஞ்செழியன், அன்பழகன், சிற்றரசு, என்.வி.நடராஜன் போன்ற பலர் தொடங்கி நடத்திய இதழ்களும் விரல்விட்டு வாசிக்கும் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை வசிகரித்தன.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இவ்விதழ்கள் இரண்டனாவிலிருந்து அதிகபட்சம் நாலணாவரை விற்கப்பட்டன. அந்தக் காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைவாயிருந்தது. பொதுவாக உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளுக்குப் பிறகே மக்கள் அறிவுவளர்ச்சிக்கோ, தகவல்களை தெரிந்து கொள்வதற்கோ செலவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;செய்தி பத்திரிகைகள் காசு செலவழித்து வாங்குபவர்களை விடவும் இரவல் பெற்று இலவசமாக படிப்பவர்களே அக்காலத்தில் அதிகமாக இருந்தனர். இதனால் குறைவான பிரதிகள் விற்பனையான நிலையிலும் ஒவ்வொரு இதழையும் ஐந்து முதல் 25 பேர் வரை படித்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;நீண்ட காலமாக கட்சிப் பத்திரிகையாக முரசொலியை நடத்தி வந்த கருணாநிதியும், முரசொலிமாறனும் கட்சி அல்லாத பத்திரிகையாக ஒரு ஜனரஞ்சகமாக வார இதழாக &quot;குங்குமத்தை&quot; கொண்டுவந்தனர். இந்த இதழுக்கு திராவிட இயக்க கருத்துக்களுக்கு நேர் எதிரிடை கருத்து கொண்ட பிராமண சமூகத்ததவரான சாவியை ஆசிரியராக்கினர். அதோடு வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ளவர்களைக் கொண்ட பிராமண சமூகத்தவர்களை வாடிக்கையாளர்களாக பெறவேண்டி அதற்கேற்றாற் போன்ற கட்டுரைகள், கதைகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. குங்குமம் தி.மு.க.வின் சாயல் இல்லாத, திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்காத, பிராமண சமூகத்துப் படைப்பாளிகளுக்குப் பிரதான இடம் தந்த ஒரு வார இதழாக சுமார் ஒன்றரை லட்சம் பிரதிவரை விற்பனையானது. பிறகு அவ்வப்போது அதில் கட்சி அடையாளம் அதிகம் தெரியத் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல, மெல்ல விற்பனை சரிந்து 60,000 பிரதிகள் வந்து நின்றது. தற்போது சன்தொலைக்காட்சியில் சளைக்காமல் விளம்பரம் தந்து, இலவச பொருள்களை இதழோடு இணைத்து தந்து வெளிவந்தாலும் கூட குங்குமம் இதழ் ஆனந்தவிகடனையோ, குமுதத்தையோ விஞ்சமுடியவில்லை. இப்போதும் தி.மு.க.வின் மீது அனுதாப மனப்போக்குள்ளவர்களின் வெகுஜன ரசனைப் போக்கிற்குத் தீனிபோடும் பத்திரிகையாத் தான் குங்குமம் வெளிவந்து கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;எம்.ஜி.ஆர். இயக்க மற்றும் அ.தி.மு.க. இதழ்கள்&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1954இல் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் அவருடைய விருப்பத்தின்‘ல் அவருடைய ரசிகர்களால் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி திராவிட இயக்க எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் தனக்கான ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சிகளை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;எம்.ஜி.ஆர். செல்வாக்கின் உச்சத்தில் இருந்த 1961இல் &quot;மக்கள் திலகம்&quot; என்ற பெயரில் ஒரு இதழ் வெளியானது. ஆனால் எம்.ஜி.ஆர் படங்களைப் பெருவெற்றி பெற வைத்த அவரது ரசிகர்கள் அவரது பெயரில் வெளியான இதழுக்கு அப்படி ஒன்றும் ஆதரவு தந்துவிடவில்லை. பிறகு &quot;புரட்சி ஏடு எம்.ஜி.ஆர். &quot;மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இதயக்கனி எம்.ஜி.ஆர் போன்ற இதழ்கள் ஏதோ சுமாரான விற்பனையில் வெளியாகின. எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இதழ்கள் எதுவுமே பல்லாயிரக்கணக்கிலோ, லட்சத்தை தொடுமளவோ விற்பனையாகவில்லை. ஆனால்&amp;nbsp;&lt;br&gt;&quot;அலை ஓசை&quot; என்ற பெயரில் வேலூர் நாராயணன் அவர்களால் நடத்தப்பட்ட மாலை நாளிதழ் ஒரு தி.மு.க. எதிர்ப்பு இதழாக 30 ஆயிரம் பிரதிகளில் வெளிவந்து கொண்டிருந்தது. அவ்விதழ் எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு வெளியேறிய போது எம்.ஜி.ஆரை ஆதரிக்கும் நிலையினை எடுத்தது. ஆனால் அ.தி.மு.க. நாளிதழாக மாறவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;அலை ஓசை எம்.ஜி.ஆர் தரப்பு நியாயங்களை- எம்.ஜி.ஆரே சிந்திக்காத விதத்தில் - அழகான வாதங்களை அடுக்கி வெளியிட்டது. தி.மு.க. அரசின் முறை கேடுகளை தைரியமாக வெளியிட்டது. அந்நாளில் அலை ஓசை காட்டிய துணிச்சல் இதழியல் தளத்தில் வேறெவரும் காட்டியிராத ஒன்றாகும். இதனால் அலைஓசைக்கு அமோக ஆதரவு பெருகியது. இதழின் விற்பனை சுமார் ஒன்றரை லட்சம் வரை உயர்ந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;அதற்கு மேலும் விற்பனை அனுகூலமிருந்த நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டியிராத அந்த காலகட்டத்தில் அச்சுக் கோத்து எடுத்துச் சென்று அச்சடிக்க வேண்டிய சூழலில் ஒரு லட்சத்து ஐம்பத்தாராயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிட முடியவில்லை. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளுக்கு இருந்த அச்சகவசதி அலைஓசைக்கு அமைந்திருக்குமானால் அது பல லட்சம் பிரதிகள் விற்பனை கண்டிருக்கும்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;12 பைசாவிற்கு விற்பனையான மாலை நாளிதழ் அலைஓசைக்கு அதன் வாசகர்கள் காலையிலேயே கடைக்காரர்களிடம் காசு கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டை வாங்கிச் செல்லும் பழக்கமெல்லாம் இருந்துள்ளது. இவ்விதழ் கிடைக்காதவர்கள் ரூ.15 கொடுத்து இதனை பிளாக்கில் வாங்கியதாகவும் பேச்சு அடிபடுகிறது. அலை ஓசையிலிருந்து பிரிந்த ஆசிரியர் குழுவினர் டி.ஆர்.ராமசாமி, எம்.சண்முகவேல், சோலை போன்றோர் எம்.ஜி.ஆரை முழுக்க, முழுக்க ஆதரித்து &quot;மக்கள் குரல்&quot; என்ற மாலை நாளிதழை தொடங்கினர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;அப்போது எம்.ஜி.ஆர் தன் தொண்டர்களிடம் &quot;அலை ஓசை படிக்க வேண்டாம். மக்கள் குரல் படியுங்கள்&quot; என பகிரங்கமாக சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆரின் பேச்சு அலைஓசையின் விற்பனையில் சுமார் பத்து சதவிகித பாதிப்பையே ஏற்படுத்த முடிந்தது. என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி, முசிறி புத்தன் அவர்களால் நாடோடி மன்னன், மன்றமுரசு போன்ற எம்.ஜி.ஆர். ஆதரவு இதழ்கள் வெளிவந்தன. அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;கலைஞர் கருணாநிதிக்கு ஒரு சாவி கிடைத்தது போல எம்.ஜி.ஆருக்கு மணியன் கிடைத்தார். இவர்கள் இருவரும் ஆனந்த விகடன் ஆசிரியர்களாக இருந்து அந்த வளாகத்திலிருந்து வந்தவர்கள். மணியன் 1978இல் &quot;இதயம் பேசுகிறது&quot; என்ற வார இதழை தொடங்கி அதனை ஒரு வெற்றிகரமான இதழாகக் கொண்டு வந்தார். இதயம் பேசுகிறது முழுக்க, முழுக்க எம்.ஜி.ஆர் ஆதரவு பத்திரிகையாக வெகுஜனதளத்தில் வெற்றி பெற்றது என்றே சொல்லவேண்டும். கருணாநிதியின் &quot;இந்துவிரோத பேச்சுகளாலும், பிராமண எதிர்ப்பு கருத்துகளாலும்&quot; அதிருப்தியுற்றிருந்த படித்த, உயர்மற்றும் நடுத்தரவர்க்கத்து வாசகர்களை நிரந்தரமாக எம்.ஜி.ஆர் வசம் கொண்டு சேர்த்ததில் மணியனுக்கும் அதற்கு அடுத்ததாக துக்ளக் சோவிற்கும் பங்குண்டு.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;முதலில் &quot;சோ&quot; எம்.ஜி.ஆரின் அரசியலை அங்கீகரிக்காமல் அவரையும் அவரது அரசில் அறவையும் படுகிண்டல் செய்துவந்தார். ஆனால் 1980இல் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். அரசை அராஜகமாக கலைத்தபோது எம்.ஜி-ஆரை தீவிரமாக ஆதரிக்கத் தொடங்கினார் சோ.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;எழுத்தாளர் வலம்புரிஜானின் வசிகரமான எழுத்தாற்றல் காரணமாக வார இதழான &quot;தாய்&quot; நல்ல வரவேற்பு பெற்றது. மணியனைவிடவும் எம்.ஜி-ஆர் புகழ் பாடுவதில் வல்லவரானாலும் வலம்புரிஜானின் இதழியல் அணுகுமுறைகளும் இலக்கியப் பார்வைகளும் &quot;தாய்&quot;க்கு தனி முத்திரை பெற்றுத் தந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மட்டுமே ஒரு இதழின் வெற்றிக்கு முழுப் பங்களிப்பு ஆற்றிவிட முடியாது. முறையான நிர்வாகம் இல்லையேல் எவ்வளவு வரவேற்பு பெற்ற இதழும் காலப்போக்கில் காலாவதி ஆகிவிடும் என்பதற்கு &quot;தாய்&quot; மற்றும் ஆசிரியர் சாவியின் &quot;சாவி&quot; போன்ற இதழ்களே உதாரணம்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1985இல் வலம்புரிஜான் ஆசிரியராக பொறுப்பேற்று &quot;தினச்செய்தி&quot; வெளியானது. 1991இல் திரைச்செல்வி என்று ஜெயலலிதா புகழ்பாட இரா. ரவிசங்கர் என்பவர் கொண்டு வந்த இதழும் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;வலிமையான எழுத்தாற்றலுக்கு பெயர் பெற்ற முரசொலியில் தயாரான அடியார், நீரோட்டம் என்ற பெயரில் நடத்திய நாளிதழ் ஒரு பேசப்பட்ட இதழாக முக்கியத்துவம் பெற்றது. பொருளாதார ரீதியில் இது அடியாருக்கு அனுகூலம் சேர்க்கவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;&quot;இதயக்கனி&quot; என்ற பெயரில் 1974இல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட திரை இதழ் நடுநடுவே நின்றுபோய் இப்போதும் எம்.ஜி.ஆரின் திரையுலகப் புகழ்பாடும் இதழாக எஸ்.விஜயன் என்பவரால் மாத இதழாக வந்து கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1976இல் எம்.ஜி.ஆர். &quot;அண்ணா&quot; என்ற பெயரில் தன்னையே ஆசிரியராக அறிவித்து ஓர் நாளிதழைக் கொண்டு வந்தார். இதன் வெளியீட்டாளர் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. முதலமைச்சரான பிறகு அண்ணாவின் ஆசிரியராக ராமன் என்பவரும் பிறகு இரவீந்திரன் என்பவரும் பொறுப்பேற்றனர். இந்த இதழ் அ.தி.மு.க.வினரிடம் அப்படி ஒன்றும் வரவேற்பைப் பெற்று விடவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 1988இல் எழுத்தாளர் பி.சி.கணேசனை ஆசிரியராகக் கொண்டு ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட நாளிதழ் &quot;நமது எம்.ஜி.ஆர்.&quot; இவ்விதழ் தொடர்ந்து வரமுடியாமல் இடையே சில காலம் நின்று போனது. 2001இல் பாவைச் சந்திரன் என்ற பிரபல இதழாளரை ஆசிரியராகக் கொண்டு நமது டாக்டர் எம்.ஜி.ஆர் என்று பெயர் மாற்றம் பெற்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்த இதழ் சாதாரணமாக கடைகளில் கிடைப்பதில்லை. அ.தி.மு.க. நிர்வாகிகளிலேயே பலர் இந்த நாளிதழ் படிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;எந்த ஒரு கொள்கையோ, தெளிவான பார்வையோ இல்லாமல் ஒரு இயக்கம் வெகுஜனத்தில் வெற்றிபெறலாம். ஆனால் அந்த இயக்கத்தின் பத்திரிகை அதன் தொண்டர்களை கூட வென்றெடுக்க முடியாது என்பதற்கு தி.மு.க., அ.தி.மு.க., வின் அதிகாரபூர்வ நாளேடுகளே சாட்சியாகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்திய தேசிய இயக்க இதழ்கள்&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வருகையும், சுதந்திரத்திற்கான சிந்தனைகளும் பத்திரிகையின் தேவையை மக்களுக்கு உணர்த்தின. குறிப்பாக மகாத்மா காந்தியின் சத்யாக்கிரக, ஒத்துழையாமை இயக்கங்களும், அதற்கு எதிரான ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டின.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;பொதுவாக கடவுள், மதம், புராண, இதிகாச சொற்பொழிவுகள், கதாகாலட்சேபம், தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் இவற்றிலே தான் மக்கள் கவனம் குவிந்திருந்தது. வறுமை, பசி, நோய் இவற்றால் உண்டாகும் மரணங்கள், துன்பங்கள்.... போன்ற எல்லாவற்றக்குமே மக்கள் கடவுளிடம் மட்டுமே விடைதேடினார்கள். தாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியால் அடிமைப் படுத்தப்பட்டிருப்பதை பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு ஏற்படாததற்குக் காரணம் அவர்கள் ஏற்கெனவே வர்ணாசிரமத்தின் அடிப்படையிலும், ஜமீன்தாரர்கள், மிராசுதார்களுக்குக் கீழேயும் ஓர் அடிமை வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்ததுதான்! இந்தியாவில் பெரும்பாலான மன்னர் ஆட்சி சமஸ்தானங்களும், நிலச்சுவான்தார்களும் ஆங்கிலேயர்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தங்களுக்கு கீழிருக்கும் மக்களை மேன்மேலும் ஆங்கிலேயர்களுக்கும் சேர்த்துச் சுரண்டிக் கொடுமைப்படுத்தி வந்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்நிலையில் வெளிநாடு சென்று படித்து வந்த இளந்தலைமுறையினரால் தான் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், மக்களாட்சி போன்ற சிந்தனைகள் மெல்ல, மெல்ல துளிர்விட்டன. இந்த சிந்தனைகளை மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் நோக்கம் தான் இந்தியாவில் இதழியல் துறைக்கான இயக்குசக்தியாக விளங்கிற்று.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இதனால்தான் மக்களை வழி நடத்தும் தலைவர்களாக இருந்த அனைவருமே இதழியலை ஒரு தவிர்க்க முடியாத, அத்தியாவசியமான ஆயுதமாகக் கையிலெடுத்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;அன்னபெசன்ட் அம்மையார், உ.வே.சு.ஐயர், சே.ப.நரசிம்மலு, மகாத்மா காந்தி, திலகர், ராஜகோபாலச்சாரியார், சுப்பிரமணியசிவா, வ.உ.சிதம்பரனார், திரு.வி.க. மறைமலை அடிகள், ப.ஜீவானந்தம், ம.பொ.சிவஞானம், ஈ.வெ.ராமசாமி..... போன்ற பல தலைவர்கள் பத்திரிகைகளை நடத்தினார்கள். இயக்கங்கள் வளர்வதற்கு இயக்கக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு இயக்கத்திலுள்ளோரின் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு பத்திரிகைகள் பயன்பட்டன. இயக்கத் தலைமைக்கும் தொண்டர்களுக்குமான பலமான பாலமாக பத்திரிகைகள் விளங்கின.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;ஆனால் இவ்வித இயக்க பத்திரிகைகளின் வரலாற்றைப் பார்த்தால் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை நஷ்டமாகவே நடத்தப்பட்டுள்ளன. இந்த நட்டத்தின் காரணமாக தொடர்ந்து நடத்தவியலாமல் பெரும்பாலானவை நின்று போயுள்ளன. ஆட்சி அதிகார பலம் கைகொடுத்தும் கூட பல பத்திரிகைகள் தொடர்ந்து வரமுடியாமல் தள்ளாடி நின்று போயின. ஆட்சி அதிகாரம், செல்வாக்கு காரணமாக சில பத்திரிகைகள் தொடர்ந்து லாபமில்லாவிட்டாலும் அல்லது வாசகர் பலம் இல்லாவிட்டாலும் இன்றும் நடத்தப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தமிழ்நாட்டில் ஜி.சுப்பிரமணிய ஐயரால் நடத்தப்பட்ட &quot;சுதேசமித்திரன்&quot; தான் முதன் முதல் காங்கிரஸ் என்ற கட்சியை - படித்தவர்கள் மட்டுமே அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டால் போதும் என் நினைத்திருந்த கட்சியை - பாமர மக்களிடம் கொண்டு சேர்த்து காங்கிரஸ் கட்சியில் சராசரி மக்களையும் சங்கமிக்க வைத்தது. எவ்வளவு சிறப்பாக வெளிவந்த போதிலும் சுமார் ஆயிரத்து சொச்சம் பிரதிகள் வரை மட்டுமே விற்பனை கொண்ட சுதேசமித்திரன் தொடர்ந்து வரஇயலாமல் துவண்டுபோனது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;பாரதியார் என்ற அக்னிகுஞ்சு சுமார் 18 ஆண்டுகாலம் இதழியல் துறைக்குத் தன்னையே அர்ப்பணித்து, அளப்பரிய பங்களிப்புகள் தந்தபோதிலும், பொருளாதார ரீதியில் இதழியல் பணிகள் பாரதியாருக்கு லாபத்தை குவிக்கவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து பாரதியார் நடத்திய &quot;இந்தியா&quot; பத்திரிகை வாயிலாகத்தான் அவர் கவிதைகள் பட்டி தொட்டியெங்கும் பரவின. ஆயினும் ஆயிரம் பிரதிகள் என்ற இலக்கையே அடைய முடிந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;பாரதியார் காலத்திற்குப் பிறகு தான் மகாத்மாகாந்தியின் வெகுஜனப் போராட்டங்கள் வீரியம் பெற்றன. உப்புச் சத்தியாகிரக போராட்டமும். இரண்டாம் உலகப்போரும் தான் பத்திரிகைகளின் விற்பனையை அதிகப்படுத்தின.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது ஒழிப்பு போராட்டங்கள் மக்களிடையே பரவவும், வரவேற்புப் பெறவும் வெற்றிபெறவும் பத்திரிகைகளே பெரிதும் பங்காற்றின.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;விடுதலைப் போராட்டத்தின் போது சுதந்திரத்திற்கான லட்சியங்கள் இதழியலின் இயங்கு சக்தியாயின. இதில் அதிகபட்ச வெற்றியை ஈட்டிய பத்திரிகை &quot;சுதந்திர சங்கு&quot; (1930-38). இது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையைத் தொட்ட முதல் தமிழ்ப் பத்திரிகையாகும். எனினும் லட்சியத்தில் காட்டிய தீவிரத்தை பத்திரிகை நிர்வாகத்தில் சிறிதும் காட்டாததாலும் பத்திரிகையில் வந்த லாபமனைத்தையும் சற்றும் முன் யோசனையின்றி சுதந்திர போராட்டத்திற்கே அர்ப்பணித்துவிட்டதாலும் பத்திரிகை ஒரு கட்டத்தில் நிற்க வேண்டியதாயிற்று.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;திராவிட இயக்கங்களுக்கு எதிரான கருத்துகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட &quot;தேசபக்தன்&quot; நாளேட்டிற்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர் திரு.வி.க.வே சொந்தமாக நடத்திய இதழ் &quot;நவசத்தி&quot;. 21 ஆண்டுகள் இவ்விதழை ஓரளவு பாதிப்பில்லாமல் பக்குவமாக கொண்டுவந்த திரு.வி.க. அதற்குப் பிறகு இராசாமணி அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டார். திரு.வி.க.வின் தேசபக்தனில் தயாரானவர்களே வெ.சாமிநாதசருமாவும், கல்கியும். தேசபக்தனின் எழுத்து நடைக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஒத்த வராமலே கல்கி அதிலிருந்து வெளியேறினார். சமஸ்கிருதக் கலப்பும் ஆங்கிலக் கலப்பும் மிகுந்திருந்த அன்றைய ஊடகங்களுக்கு ஒரு மாற்று ஊடகமாக நவசக்தி திகழ்ந்தது. டாக்டர் பி.வரதாராஜூலுவின் &quot;தமிழ்நாடு&quot; முதலில் வார இதழாக வெளியாகி பிறகு வெற்றிகரமான நாளிதழாக பரிமாணம் பெற்றது. காங்கிரஸ் கொள்கைகளை தீவிரமாக ஆதரித்த இவ்விதழ் அரசாங்கதோடு தீவிரமான மோதல் போக்கை கொண்டதால் பல சிரமங்களுக்கு ஆளானது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இந்நிலையில் டாக்டர் பி.வரதராஜூலு காங்கிரசில் பிராமண ஆதிக்கம் நிலவுவதாகக் குமுறி காங்கிரசிலிருந்து விலகி காங்கிரசை விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் இதழின் விற்பனையில் பலமான சரிவு ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனக்கென்று ஒரு நாளிதழ் வேண்டுமென்று கருதியது. இதற்காக அன்றைய காங்கிரஸ் ஆந்திரகேசரி பிரகாசம் &quot;சுயராஜ்யா&quot; என்ற இதழை வ.ரா.சுத்தானந்தபாரதியார், எம்.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரை ஆசிரியர் குழுவில் நியமித்து வெளிக்கொண்டு வந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இவ்வளவு சிறப்பான ஆசிரியர் குழு இருந்த நிலையிலும் அன்றைய காங்கிரசில் நிலவிய கோஷ்டிபூசல்கள் மற்றும் நிர்வாகத் தவறுகள் காரணமாக சுயராஜ்யா தொடர்ந்து வெளிவரவில்லை. பேனா மன்னர் என புகழப்பட்டவர் டி.எஸ்.சொக்கலிங்கம். தீவிர தேசபக்தர். &quot;காந்தி&quot; (1931) என்ற பெயரில் காலணா விலையில் இவர் ஒரு இதழ் கொண்டு வந்தார். இவ்விதழ் பெரிதும் பேசப்பட்டது ஆயினும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவர் தினமணி ஆசிரியராகி தினமணிக்குப் புகழ்சேர்த்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;தினமணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபட்டு வெளியேறி இவர் &quot;தினசரி&quot; என்ற நாளிதழ் (1944) தொடங்கினார். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்றவர்களை துணை ஆசிரியர்களாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர் தீவிரமாக ஆதரித்த தினசரி மிகச் சிறப்பான நாளிதழாகப் பேசப்பட்ட போதிலும் பொருளாதார ரீதியில் வெற்றிகாண முடியாமல் நின்றுவிட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;இராம்நாத் கோயங்காவால் நடத்தப்படட தினமணி சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த நாளிதழ். ஆயினும் அரசங்கத்தை தீவிரமாக பகைத்துக் கொள்ளாமல், நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, சிறந்த நிர்வாக ஆளுமையுடன் செயல்பட்டதால் தொடர்ந்து தொய்வில்லாமல் வந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற பத்திரிகை உலக ஜாம்பவான்கள் தினமணி ஆசிரியர் குழுவிலிருந்த முக்கியமானவர்களோடு வெளியேறிய நிலையிலும் தினமணி சமாளித்துவிட்டது. சொக்கலிங்கத்தால் உருவாக்கப்பட்ட ஏ.என்.சிவராமன் தினமணியை தூக்கி நிறுத்திவிட்டார். எழுத்தாளர் கல்கி ஆனந்தி விகடனில் அச்சாணியாக கருதப்பட்டவர். அவர் விகடனில் எஸ்.எஸ்.வாசனுடன் கருத்து வேறுபட்டு வெளியேறினார். ஆயினும் சிறந்த நிர்வாகியான எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனை எந்த சேதாரமும் இல்லாமல் மேன்மேலும் வெற்றிகரமான இதழாகக் கொண்டுவந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;கல்கி அவர்கள் சதாசிவத்துடன் இணைந்து ராஜாஜி ஆதரவுடன் &quot;கல்கி&quot; வார இதழ் தொடங்கினார். கல்கி எழுத்துப் பணியையும், சதாசிவம் நிர்வாகப்பணியுமென பிரித்துக் கொண்டனர். கல்கி இதழ் நின்று நிலைத்துவிட்டது. ஆனால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இன்றுவரை சுமார் 40,000 பிரதிகளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;கவியரசு கண்ணதாசன் தி.மு.க. விலிருந்து வெளியேறி காங்கிரசில் இருந்த நேரம் &quot;கடிதம்&quot; என்ற நாளிதழை சிறிதுகாலம் நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் &quot;நவசக்தி&quot; என்ற பெயரில் இயக்க இதழ் நடத்தப்படட்து. காமராசர் காங்கரஸ் தலைவராக இருந்த கால கட்டத்தில் பெரும் தொண்டர் படையுடனும், ஜெயகாந்தன், பி.சி.கணேசன், சின்னக்குத்தூசி போன்ற எழுத்தாளர்கள் பலத்துடனும் பரபரப்பாக இவ்விதழ் வெளிவந்தது. தி.மு.க.விற்கும் சவால்விடும் அனல்பறக்கும் செய்தி, விமர்சனக்கட்டுரைகள், இதில் வெளியாயின. எனினும் சுமார் 30,000 பிரதிகளே நவசக்தி விற்பனை கண்டது. தொடர்ந்து லாபகரமாக இதை நடத்தமுடியவில்லை. நாத்திகம் ராமசாமி அவர்களை நவசக்தியை நடத்தும்படி கூட காமராஜர் கேட்டுப் பார்த்தாரம். நாத்திகம் இராமசாமி நவசக்தி ஆசிரியர் குழுவோடு தனக்கு ஒத்துப்போகாது என்று மறுத்துவிட்டாராம்.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1980களின் இறுதியில் மூப்பனாரும், ப.சிதம்பரமும் ஜெயகாந்தனை ஆசிரியராக்கி தினசரியைக் கொண்டுவந்தனர். இந்த இதழும் மிக சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இறுதியில் இதில் பணியாற்றியவர்களுக்கு கூட சம்பளம் தரவழியில்லாமல் நிறுத்தப்பட்டு விட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;1990களின் இறுதியின் மீண்டும் நவசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தார் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா. அப்போதும் இதன் விற்பனையை ஐயாயிரம் பிரதிகளுக்குமேல் அதிகரிக்க முடியவில்லை! இப்படியாகக் பலமான இயக்கங்களாயிருந்தாலும் பிரபலமான எழுத்தாளர்களாயிருந்தாலும் அவை இதழியல் விற்பனைக்கு பெரிய பங்களிப்பு ஆற்றிவிட இயலாது என்பதே யதார்த்தமான உண்மையாகவுள்ளது.&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;வெகுஜனமக்களின் ரசனையை, மனப்போக்குகளை அனுமானிக்கத் தெரிந்த ஆசிரியர் தலைமையுக், உறுதியான நிர்வாக பலமும் சேர்ந்து அமையும் போதுதான் இதழியலின் வெற்றி பிரகாசமடைகிறது. இந்த இரண்டில் எந்த ஒன்று பலவீனமென்றாலும் வெற்றி கேள்விக்குறியே!&lt;/p&gt;&lt;p style=&quot;font-family: Times; font-size: 12px; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; &quot;&gt;நன்றி: தமிழர் கண்ணோட்டம்&lt;/p&gt;&lt;div class=&quot;span-4 last&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; width: 150px; float: left; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;div class=&quot;right_links&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 11px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;ul style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; list-style: none; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-11</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-11</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 14:43:22 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!</title>
			<description>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;line-height: 22px; background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;கூடல்&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;color: rgb(82, 82, 0); background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 21 APRIL, 2010&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/marie-smith-jones.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;Tamil tops the s...</description>
			<content:encoded>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;line-height: 22px; background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;கூடல்&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;color: rgb(82, 82, 0); background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 21 APRIL, 2010&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/marie-smith-jones.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;Tamil tops the series of languages digged-in? - Tamil Literature Ilakkiyam Papers&quot; title=&quot;Tamil tops the series of languages digged-in? - Tamil Literature Ilakkiyam Papers&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 10px 10px 0px 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் &quot;மரியா ஸ்மித் ஜோனெஸ்&quot; என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.&lt;/strong&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான &quot;ஏயக்&quot; என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே &quot;ஏயக்&quot; மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். &quot;ஏயக்&quot; மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&quot;ஏயக்&quot; மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு &quot;ஏயக்&quot; மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. &quot;ஏயக்&quot; மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு &quot;ஏயக்&quot; மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. &quot;பொதுவான தமிழ்&quot; இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் &quot;வட்டார மொழி இலக்கியங்கள்&quot; என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் &quot;அழிந்து போன மொழிகளின் பட்டியலில்&quot; தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு &quot;ஏயக்&quot; மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழரோடு தமிழில் பேசுவோம்...&lt;br&gt;தமிழன் என்று சொல்வோம்....&lt;br&gt;தலை நிமிர்ந்து நிற்போம்.....&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&quot;தமிழன் இல்லாத நாடில்லை&lt;br&gt;தமிழனு&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;க்&lt;/strong&gt;கென்று ஒரு நாடில்லை...&quot;&lt;/p&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-10</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-10</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 14:25:11 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>தமிழ் மொழிக்கு ஒரு நாடு இல்லை</title>
			<description>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;line-height: 22px; background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;கிருசுணா டாவின்சி&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;color: rgb(82, 82, 0); background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 25 JANUARY, 2009&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0p...</description>
			<content:encoded>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;line-height: 22px; background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;கிருசுணா டாவின்சி&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;color: rgb(82, 82, 0); background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 25 JANUARY, 2009&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அம்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும் பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும்.&lt;/strong&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்து நடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. யாழ்ப்பாணத்தில் பிறந்த அவரும் ஒரு நவீன பாணர்தான். ஊர் ஊராகச் சென்று பாடிய பாணர்கள்போல தேசம் தேசமாக சுற்றி மானுடத்தைப் பற்றி பேசுகிறார். இதுவரை கட்டுரைகள் &quot;சிறுகதைகள்&quot; நேர்காணல்கள் விமர்சனங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய நாவல் &quot;உயிர்மை&quot; வெளியீடாக இந்த டிசம்பரில் வருகிறது. ஐ.நா.வில் அதிகாரியாக பல வருடங்கள் பணியாற்றியவர் தற்போது ஓய்வில் கனடாவில் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தற்போது இலங்கையில் தமிழ்ப் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்குப் போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ்ப் புத்தகங்கள் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தேன். அந்த சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்துப் போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டுத் தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக் கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. &quot;இங்கே இப்பொழுது தமிழ்ப் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது? என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது&quot; என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப்படுத்த முடியாது. யாராவது தமிழ்ப் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division) கொண்டு போவார்கள். அப்படிப் போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அந்த நண்பர் இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம். ஆனால், மனைவி வன்னியைச் சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீஸாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வர முடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்து விட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சமீபத்தில் கனடா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை. இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் தன் வாழ்நாள் சேமிப்பைச் செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒன்றைப் பதிப்பித்தால்தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான் எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தைப் படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்துப் பேசினார். அவர் எல்லா தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறு மாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை. எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு தமிழ் எழுத்தாளர் பல நாடுகளில் பணிபுரிந்து அனுபவங்களைப் பெறுவது என்பது அபூர்வமாக நிகழ்கிற ஒன்று. உங்களுக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தில் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு இலக்கியங்களைப் படிப்பேன். அந்த நாட்டு எழுத்தாளர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றி வலுப்பெற்று வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தி லிருந்து தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி தென்படுகிறது. அமோகமான படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கியிருந்தன. நவீன தமிழ்ப் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம் சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சு.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ. போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை மொழிபெயர்த்தால் அவை உலக நாடுகளில் பெரிய அலையை கிளப்பும். எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழின் மறுமலர்ச்சிக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று புலம்பெயர்ந்த தமிழர்கள். இரண்டு, தமிழ் கணிமை வளர்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறையப் படிக்கிறார்கள். அத்துடன் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். சமீபத்தில் கனடாவில் நாள் கூலிக்கு வேலை செய்யும் ஒரு தமிழர் தன் சம்பளத்தில் 10 சதவீதம் புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழிப்பதாகச் சொன்னார். இரண்டாவது, தமிழ் கணினிப் புரட்சி. பல எழுத்தாளர்கள் கணினியில் நேராக எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது எவ்வளவு எளிது. வலைப்பூக்கள் வந்து நிறையப்பேர் எழுதினார்கள். நிறைய எழுதினால் நிறையத் தேறும். இன்று எழுதும் பல புதிய எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் உருவாகியவர்கள்தான்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இன்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சிறந்த இடத்தில் இருப்பவர் 31 வயதான சிமமண்டா என்ற பெண். சென்ற மாதம் இவருடைய Half of a yellow Sun புத்தகத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்திருக்கிறது. நம்பமுடியாத பெரிய தொகை, 500,000 டாலர்கள். நாவல் அருமையான நாவல். ஆனால் இவருடைய நாவலிலும் பார்க்கச் சிறந்த நாலு தமிழ் நாவல்களையாவது என்னால் சொல்ல முடியும். ஆனால் யாரும் அவற்றைத் தேர்ந்து பரிசு கொடுப்பதில்லை. காரணம் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இதைத்தான் நான் திருப்பித் திருப்பிச் சொல்லியும் எழுதியும் வருகிறேன். தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன், பிரமிள், அம்பை, மு.தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். அவை வெளியுலகத்துக்குத் தெரிய வருவதில்லை. காரணம், அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;போருக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது. போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும் திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்குப் புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன மாறுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;1995-ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து தொடர்ந்து கனடாவின் ஓர் அங்கமாக வாழ்வதற்குத் தீர்மானித்தார்கள். ஒரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980-ல் கூட அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;1962-ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993-ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ (20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய மொழி பேசும் பிரதேசம்) சேர்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான, 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரச மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள் தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம். ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களாதேஷ். 1948-ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமட் அலி ஜின்னா பேசியபோது உருது மொழியை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரச மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களாதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம். அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுமாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ (பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா. சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவத் தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் &quot;இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்&quot; என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும். முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசும்போது constitutional democracy என்று சொல்வார்கள். அதன் தாத்பரியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல; சிறுபான்மையரின் அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்பது எவ்வளவு சாத்தியமானது?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் எழுதப் பேசத் தெரியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறதே. இதைப்பற்றி?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். அவர் மணம்முடித்து பல வருடம் ஆகியும் அவருக்குப் பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும், அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். &quot;உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா? அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?&quot; மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதி உங்களுக்குத் தெரியும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களைப் பற்றியே பேசுகிறேன். மீதிப் பேருக்கும் இது பொருந்தும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். ஆங்கில மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் எவை? சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவைப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;12 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் கால்வாசியாகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;100 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் அரைவாசியாகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;300 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் முக்கால்வாசியாகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இதே மாதிரி தமிழிலும் 500, 600 தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தெரிந்தால் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கவும் எழுதவும் முடியும். ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தால் வீரகேசரியையும், தினத்தந்தியையும் படிக்கலாம். ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம். தமிழ் படிப்பது என்பது இப்போது கம்ப்யூட்டரில் வெகு இலகுவாகிவிட்டது. ஐந்து வயதில் &quot;அணில், ஆடு, இலை, ஈ&quot; என்று எழுதிப் படிக்கத் தேவையில்லை. ஒரு 15 வயது மாணவர், இரண்டு வாரப் பயிற்சியில் 500 வார்த்தைகளைக் கற்றுவிடலாம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. கடந்த மாநாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50-60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள். நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவு செய்து கட்டணம் கட்டியாக வேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ்ப் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;புலம் பெயர் தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள். இந்தச் சமயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி உண்டு. &quot;உங்களுக்கு என்ன வேண்டும். நாலாம் வகுப்பு தமிழில் எழுதப் படிக்கத் தெரியும் பத்து லட்சம் பேரா அல்லது தமிழில் உலகத் தரத்துக்கு உயர்ந்த இலக்கியம் படைக்கும் 10,000 பேரா?&quot;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மிருகண்டு முனிவர் தன்னுடைய முடிவைச் சொல்ல ஒரு வித தயக்கமும் காட்டவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும் என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தாங்கள் சொல்லியிருந்தீர்கள். (அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு கனடிய வாழ் சிகையலங்காரர் சொல்வதாகிய கட்டுரை) தமிழ் மொழி அழித்தல் இலங்கையில் எப்படி எந்தெந்த வகைகளில் நடத்தப்படுகிறது?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நான் என்னுடைய கட்டுரையில் எழுதியது ஒரு முடி திருத்துபவர் சொன்னதைத்தான். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராபிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். ஆனால் அராபிக் மொழிக்கு நாடு இல்லாததால் அது அழிவை நோக்கி நகர்கிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு தமிழ் எழுத்தாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். &quot;ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.&quot;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள மால்ட்டா என்ற சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அந்த மொழி அழியுமா? அழியாது. அவர்களுடைய மொழி அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நாடு அழிய வேண்டும். ஒரு மாநிலம் செய்ய முடியாததை நாடு செய்துவிடும். தமிழைச் செம்மொழியாக்க நாங்கள் எத்தனை வருடங்கள் பாடுபடவேண்டியிருந்தது. ஒரு நாடாக இருந்திருந்தால் இதை எளிதாகச் செய்து முடித்திருக்கலாம். ஒரு காலத்தில் உலகிலே 50,000க்கும் மேலே மொழிகள் இருந்தன. உலகம் சுருங்கச் சுருங்க மொழிகளின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே வந்தது. இப்பொழுது 7000 மொழிகள் இருக்கின்றன. அவையும் வரவரக் குறைந்து கொண்டே வரும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உலகத்திலே அதிகம் பேசப்படும் 12 மொழிகளை வரிசைப்படுத்தினால் அது இப்படி இருக்கும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மண்டரின், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஷ்யன், வங்காளம், போர்ச்சுகீயம், அராபி, ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான், உருது. இவை எல்லாவற்றுக்கும் தேசம் உண்டு. இதற்குப் பின்னே வரும் தெலுங்கு, மாராத்தி, தமிழ் போன்ற மொழிகளுக்கு தேசம் இல்லை. உலகத்தின் அரைவாசி சனத்தொகை இந்த 12 மொழிகளைப் பேசுகிறது. உலகம் சுருங்கச் சுருங்க சின்ன மொழிகளை பெரிய மொழிகள் விழுங்கும். ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும். இன்று 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை விட மூன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியின் எதிர்காலம் பிரகாசமானது. ஏனென்றால் அதற்கு ஒரு நாடு உண்டு. யேசு பேசிய மொழியான அராமிக் இன்று அழிந்து போகிறதென்றால் அதற்குக் காரணம் அராமிக் மொழிக்கு ஒரு நாடு இல்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னிடம் சொன்னார், &quot;பிரிட்டிஷ் அரசாங்கம் வருடம் தோறும் எத்தனையோ மில்லியன் பவுண்டுகளை சேக்ஸ்பியரைப் பரப்ப செலவு செய்கிறது&quot; என்று. ஒரு நாடு இருப்பதனால்தானே அவர்களால் அப்படிச் செய்யமுடிகிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஐ.நா. சபையில் ஒரு அதிகாரியாக பல நாடுகளில் பணியாற்றியவர் நீங்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் வலிமை மிகுந்த ஐ.நா.சபையினால் கையைப் பிசைந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையைக் காண்கிறோம். ஐ.நா.சபையும் சுதந்திரமின்றி இருக்கிறதா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;1945-ல் 50 உலக நாடுகள் ஒன்றுகூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின. ஐக்கிய நாடுகளின் எண்ணிக்கை வரவர அதிகரித்தாலும் சுவிட்சர்லாந்து மட்டும் சபையில் சேரவில்லை. 2001 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தும் ஐ.நா.வின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேர்ந்தது. இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று அங்கத்துவ நாடுகளுக்கிடையில் தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும், அதனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதுதான் கையைப் பிசைந்துகொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஐ.நா. சபையின் சாதனைகளை குறைவாக மதிப்பிட முடியாது. 1948-ல் மனித உரிமை பிரகடனத்தைக் கொண்டு வந்து உலகமெங்கனும் மனித உரிமையின் முக்கியத்துவத்தை அதனால் நிலைநாட்ட முடிந்தது. இது பெரிய சாதனை. உலக நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களில் அகதிகளான கோடிக்கணக்கான மக்களுக்கு வதிவிடமும், உணவும் சிலசமயங்களில் நாடும் அளித்து உதவி செய்தது UNHCR அமைப்பு. அதன் சேவைக்காக அதற்கு இரண்டு தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. UNICEF, ILO போன்ற அமைப்புகளுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. உலகத்திலிருந்து பெரிய அம்மை நோய் ஒரேயடியாக ஒழிந்துவிட்டது என்று உலக சுகாதார மையம் (கீபிளி) 1980-ல் அறிவித்தது. இந்த மையம் இல்லாவிட்டால் இது ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;1988-ல் உலக சமாதானத்துக்காகப் போராடிய 10,000 ஐ.நா. சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள். இவர்கள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், சைப்ரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள். இன்னும் முக்கியமாக கம்போடிய, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முறையாக தேர்தல் நடப்பதற்கு உதவியாக இருந்து, புது நாடு உருவாவதற்கும் காரணமாக அமைந்தது ஐ.நா. சபைதான். 1993-ல் எரித்திரியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டதற்கு ஐ.நா. சபையின் முயற்சி முக்கியமானது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இப்பொழுது உள்ள உலக நாடுகளை அடக்கிய ஆகப்பெரிய சபை ஐ.நா.சபைதான். இந்தச் சபையின் தோல்விகளைப் பட்டியலிட்டு அதைக் கலைத்துவிட வேண்டும் என்று சில வருடங்களாக குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. இதனிலும் சிறந்த செயல்திறன் கொண்ட ஓர் அமைப்பு உருவாகும் வரை ஐ.நா.சபை தொடரத்தான் செய்யும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உங்களுடைய பால்ய காலமும், இளமைக்காலமும் இலங்கையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த இனிய நிகழ்வுகளை பல படைப்புகளில் பதிவு செய்திருக்கிறீர்கள். அந்த நாட்களை மீண்டும் மீட்டெடுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? மறுபடி உங்கள் நினைவுகள் உருவான இடங்களைக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதா? அப்போ உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;என்னுடைய பால்ய, இளமைக்கால வாழ்க்கையை நான் ஒரு நாவலாக பதிவு செய்திருக்கிறேன். சுயசரிதைத் தன்மையான அந்த நாவலில் உண்மையும், கற்பனையும் கலந்திருக்கும். அதனால்தான் தலைப்பாக &quot;உண்மை கலந்த நாட்குறிப்புகள்&quot; என்று பெயர் வைத்திருக்கிறேன். &quot;உயிர்மை&quot; பதிப்பக வெளியீடாக டிசம்பர் மாதம் வருகிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;போர் தொடங்கிய பிறகு என் பிறந்த ஊருக்குப் போய்வரும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்கள் அண்ணார் இறந்துபோனார். அவருக்கு இரு சகோதரிகள், நாலு சகோதரர்கள். நான் இன்றைக்கு இந்நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். அவருடைய மரணச்சடங்கில் ஒரு சகோதரரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கே ஊரடங்குச் சட்டம் இருந்தது. மருந்துகள் இல்லாத, கூரையில் ஓட்டை விழுந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் அவர் தனியாகக் கிடந்து உயிர் நீத்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;என் மீதி வாழ்நாளில் நான் பிறந்த பூமியை திரும்பவும் பார்க்கக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி கிடைத்தால் நான் பார்க்க விரும்புவது மரங்களை. எங்கள் வீட்டு வளவில் தென்னை, பனை, வேம்பு, இலுப்பை, பலா, மா, நாவல், கொய்யா, இலந்தை, மாதுளை, எலுமிச்சை என்று நிறைய மரங்கள் இருந்தன. 20 வகையான மாம்பழங்கள். மிகச் சின்ன வயதிலேயே ஒரு பழத்தைச் சாப்பிடும்போது அது எந்த மரத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிடுவேன்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கிணறுகளைப் பார்க்க விருப்பம். யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிணறு இருக்கும். எங்கள் வீட்டுக்குக் கிட்ட நடு வீதியில் ஒரு கிணறு இருந்தது. அதை பொதுவாக ஐந்து, ஆறு குடும்பங்கள் பாவித்தன. அடிக்கடி யாராவது தவறி விழுந்து சாவார்கள். மாடு, நாய் விழுந்து செத்துப்போகும். நாங்கள் சிறுவர்கள் எங்கே தவறி அதற்குள் விழுந்துவிடுவோமோ என்று அம்மா பயந்தபடியே இருப்பார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இன்னொன்று கொக்குவில் ரயில் ஸ்டேஷன். என்னுடைய ஐயா சிறுவனாக இருந்தபோது ரயில் நிலையம் அங்கே வந்தது. என்னுடைய சிறு வயதில் ரயில் நிலையம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் கிராமத்து மணிக்கூடு அதுதான். விருந்தினர்கள் ரயிலில் வந்து இறங்குவார்கள், நாங்கள் போய் அழைத்து வருவோம். பரிசுகள் கிடைக்கும். ரயில் கூவும் சத்தத்துக்காக காத்திருப்போம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இன்று ஸ்டேஷன், தண்டவாளம் சிலிப்பர் கட்டைகள் எல்லாமே அழிந்துவிட்டன. அது இருந்த இடமே இல்லை. குண்டு விழுந்து நடுவீதிக் கிணறும் முற்றிலுமாக அழிந்து மூடப்பட்டுவிட்டது என்று கேள்விப்படுகிறேன். ஒரு அழிவு துக்கமானது; மற்ற சந்தோசமானது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு புலம் பெயர்ந்த தமிழ் இளைஞரைச் சந்தித்தேன். இவருக்கு முப்பது வயதிருக்கும். உலகத்துப் பாரத்தை எல்லாம் சுமப்பதுபோல மற்றவர்கள் தோற்றமளிப்பார்கள். இவர் உற்சாகமாக இருந்தார். நூற்றுக்கணக்கான புலம் பெயர் கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவருடையது வித்தியாசமானது. இலங்கையில் இவரை மூன்று தரம் பிடித்து சிறையில் அடைத்தார்கள். பாங்கொக்கில் சிறையில் இருந்திருக்கிறார். ரஷ்யாவில் பனிப்புதையலில் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள். ஒன்பது நாள் விசா கெடுவை மீறித் தங்கியதற்காக கழுத்திலே மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடிந்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக் கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது. அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ளப் பாஸ்போர்ட்டை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆறுமாதம் சிறையில் வைத்தார்கள். கடைசியில் மூன்று வருட பயணத்துக்குப் பிறகு கனடாவுக்கு வந்து சேர்ந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அகதியாக இருந்தபோது 17 கம்பெனிகளில் வேலைக்கு நேர்முகத் தேர்விற்குப் போனார். எல்லோரும் அவரிடம் &quot;உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?&quot; என்றே கேள்வி கேட்டார்கள். 18-வது இடத்தில் அவர் இப்படி பதில் சொன்னார். &quot;ஐயா, எனக்கு கனடா அனுபவம் இல்லை, ஆனால் என்னிடம் நிறைய உலக அனுபவம் உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இன்று வரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என்னுடைய திறமை.&quot; அப்போதும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இது ஓர் உதாரணம்தான். கனடாவில் வாய் வேலை செய்ய வேண்டும். அல்லது கை வேலை செய்ய வேண்டும் அல்லது மூளை வேலை செய்ய வேண்டும். நீங்கள் உயர்ந்துவிடலாம். மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒருவரும் பிறந்த நாட்டை மறப்பதில்லை. தங்கள் சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார்கள். அவர்களையும் வரவழைக்கிறார்கள். கடுமையாகப் படித்து முன்னேறுகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்குக் கைகொடுக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இன்றைய ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு பெரும் எழுச்சியாகத் திரண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல வேற்றின தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து தொடர் உண்ணாவிரதம், கவனயீர்ப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். போரை நிறுத்த இலங்கை அரசை இணங்கச் செய்வதற்கு கனடிய அரசு தனது பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்று ஒருமித்து அழுத்தம் கொடுக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஈழத்தில் நிகழும் போர் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தங்களின் திறந்த விமர்சனத்தை வைக்கக் கூடிய ஜனநாயக சுதந்திரம் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இன்று இருக்கிறதா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆரம்பத்திலிருந்தே ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என்பன கேள்விக்குறியாகவே இலங்கையில் இருந்தன. இவை படிப்படியா இறுக்கப்பட்டு 2005-ல் மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம் இருக்கட்டும், போர் நடக்கும் பிரதேசங்களில் ஊடகவியலாளர்களே இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. ஐ.நா. குழுக்களும் இல்லை. நிலைமை எப்படி இருக்கும் என்று ஊகித்துத் தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கொழும்பிலே பயங்கரவாத விசாரணைப் பிரிவு இயங்குகிறது என்று சொன்னேன். அவர்கள் யாரையும் பிடித்துப் போகலாம். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் தடுத்து வைக்கலாம். அங்கே போனவர்கள் திரும்பி வருவது மிக அரிதாகவே நடக்கும். 2006-ம் ஆண்டு பரமேஸ்வரி முனுசாமி என்ற ஊடகவியலாளர் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இதற்கு முன்னர் உலகப் பிரசித்தி பெற்ற தாரகி சிவராம் என்ற ஊடகவியலாளருக்கு நடந்தது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கொழும்பு காவல் நிலையம் ஒன்றின் முன்பாக அவர் நம்பர் இல்லாத வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார். இலங்கைப் பாராளுமன்றம் அருகிலுள்ள புதருக்குள் இவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தலையிலே துப்பாக்கியால் சுடப்பட்டு மரணித்திருந்தார். உலகமெங்கும் இந்தக் கொலைக்கு கண்டனம் எழும்பியது. அமெரிக்க எழுத்தாளர் பெயர் இல்லை என்ற அமெரிக்கர் இவருடைய வாழ்க்கையை &quot;வாழ்வும் மரணமும்&quot; என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இவருடைய சாவுக்குப் பிறகு பிடிபடும் பத்திரிகைக்காரர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் &quot;நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் உங்களுக்கு தாரகி சிவராமுக்கு நடந்ததுதான் நடக்கும்&quot; என்று வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள் என்று சமீபத்தில் பிடிபட்ட இன்னொருத்தர் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஜே.எஸ். திஸ்ஸநாயகம் என்ற ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தன் மனுவில் &quot;அடிப்படை மனித உரிமை மீறல்&quot; என்று அரசை குற்றம் சாட்டியிருக்கிறார். தன்னை முறையற்ற விதத்தில் போலீஸார் நடத்துவதாகவும், தன்னை விடுவிக்கக் கோரியும் விண்ணப்பித்திருக்கிறார். இன்றுவரை, எட்டு மாதங்கள் கழிந்த பிறகும், அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் ஆயுதம் தூக்கவில்லை. அவர்கள் தூக்கிய ஆயுதம் பேனாதான். இவர்களுடைய எழுத்துக்களை அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அதிலே ஒரு சிறப்பு இருக்கிறது. மகிந்த ராஜபக்ஷே 23 வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார். 35 வயதில் சட்டம் பயின்று பாஸ் பண்ணினார். அவர் பிரதானமாக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் வழக்குகளையே எடுத்தார். இன்று அவர் படித்த மனித உரிமை மீறல் சட்டங்களிலுள்ள நுணுக்கங்கள் அத்தனையையும் மனித உரிமை மீறல்களை மூடுவதற்காகவே பயன்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்தியாவிலும் தமிழகத்திலும் பொதுவாக நிறைந்திருக்கும் சாதியக் கட்டுப்பாடுகள், சாதி வெறி, தீண்டாமை, சாதிச் சுரண்டல் போன்றவை ஈழத்திலும் உண்டு என்று சொல்லப்படுகிறதே. இதைப் பற்றிய உங்கள் எண்ணம்?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஈழத்து சாதி அமைப்பு என்பது இந்தியாவில் இருப்பதுபோல அல்ல, முற்றிலும் மாறுபட்டது. பிராமண மேலாதிக்க நிலை இல்லை. சாதியில் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டபோதும் அதிகாரம் வெள்ளாள சமூகத்தினரிடையேயே கிடந்தது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் வரலாற்றின்படி இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட பிரபுக்கள் தங்கள் அடிமைக் குடிகளுடன் வந்து குடியேறி தங்களை ஸ்தாபித்துக் கொண்டனர். இந்தப் பிரபுக்கள்தான் வெள்ளாளர். அரசியல் அதிகாரத்தை ஆரம்பத்திலிருந்தே கைப்பற்றியிருந்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒரு குறைந்த சாதிக்காரனுக்கு ஒரு பிள்ளை பிறந்தால் அவன் அதைப் பதிவு செய்ய கச்சேரிக்குப் போவான். அங்கே பெயரைப் பதிவு செய்ய ஒரு வெள்ளாளர் இருப்பார். இவன் &quot;கந்தப்பிள்ளை&quot; என்று பெயர் கொடுத்தால் அவர் &quot;கந்தன்&quot; என்று பதிவில் எழுதுவார். இவன் &quot;சுப்பிரமணியம்&quot; என்று பெயர் கொடுத்தால் அவர் &quot;சுப்பன்&quot; என்று பதிவார். இப்படி சாதி அடையாளம் குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நான் ஆரம்பத்தில் படித்தது ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடத்தில். இது புதிதாகக் கட்டிய பள்ளிக்கூடம். இதன் தலைமையாசிரியர் காந்தி பக்தர். குறைந்த சாதிகளையும் பள்ளிக்கூடத்தில் அனுமதிக்க வேண்டும் என்றார். மேல்சாதியினர் எதிர்த்தனர். இவர் விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் வகுப்பின் கடைசியில் வாங்குபோட்டு அவர்களை உட்கார வைத்தார். எங்கள் வகுப்பில் அப்படி இரண்டு பேர் படித்தார்கள். அவர்களுடன் சேரக் கூடாது என்ற கட்டளை இருந்தது. அந்தக் காரணத்தினாலேயே நாங்கள் அவர்களை எங்கள் விளையாட்டுகளில் சேர்த்துக்கொள்ள போட்டி போடுவோம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உண்மையில் சாதி அதிகம் பாராட்டப்பட்டது திருமணங்களிலும் திருவிழாக்களிலும்தான். கோயில் திருவிழாக்களில் பஞ்சமர்கள் அமர்வதற்கென்று சதுரமாகக் கயிறு கட்டி அதற்குள்ளே உட்கார்த்திவிடுவார்கள். கே.டானியல் தன்னுடைய பஞ்சமர் நாவலில் இதை முழுமையாக விவரிப்பார். திருமணம் என்று வரும்போது விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு கனடாவுக்கு அகதியாக வந்தவர்கள் அங்கே வீட்டைத் துறந்து, பொருள்களைத் துறந்து, உறவுகளைத் துறந்து வந்தாலும் சாதியை மட்டும் துறக்காமல் தங்களுடன் கொண்டு வந்திருந்ததை சமீபத்தில் கண்டுபிடித்தேன்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அவள் ஒரு பையனைக் காதலித்தாள். அவனும் ஈழத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும் பெண்ணின் பெற்றோர்கள் எப்படியோ துருவி ஆராய்ந்து அவன் சாதி நுனியைப் பிடித்துவிட்டார்கள். மகளிடம் அவன் &quot;அங்காலிப் பக்கம்&quot; என்றார்கள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெற்றோரிடம் அவள் ஒரு கேள்வி கேட்டாள். &quot;நான் ஒரு ஜமாய்க்கன் பையனையோ, போலந்து பையனையோ பிடித்திருந்தால் நீங்கள் சம்மதித்திருப்பீர்கள். சொந்த நாடு என்றபோது சாதியின் வேர்களைத் தேடி மறுக்கிறீர்கள்.&quot; அவர்களிடத்தில் பதில் இல்லை. அந்தப் பெண் அவனையே மணம் முடித்தாள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மார்ட்டின் லூதர்கிங்கின் அஹிம்சைப் போராட்டத்தில் சம உரிமைச் சட்டம் அமெரிக்காவில் வந்தபோது பாராக் ஒபாமாவின் வயது நாலு. இன்று சரியாக 44 வருடங்கள் கழித்து அவரை அடுத்த ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு 44 வருடங்களில் இப்படி மாற்றம் நிகழ முடியும் என்றால் மேலும் ஒரு 44 வருடத்தில் ஏன் விடுதலையும், சமத்துவமும், அன்பும் உலகில் நிறைந்திருக்க முடியாது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தற்போது தமிழ்நாட்டில் அரசியல், சமூகம் மற்றும் திரைப்படத்துறை இவற்றில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவற்றினால் ஈழத்தமிழனுக்கு உண்மையிலேயே நன்மை ஏதேனும் விளையுமா? இவற்றைத் தவிர தமிழ்நாடு இலங்கைத் தமிழனுக்கு எந்த விதத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இலங்கையில் சமீபத்தில் ஏதேனும் வெள்ளச் சேதம் ஏற்பட்டதா? அல்லது கொடிய புயல் வீசியதா? அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதா? அப்படி ஒன்றுமே இல்லை. ஓர் அரசு தன் மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. மூன்று லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உடுக்க உடை இல்லாமல், உணவு இல்லாமல், மரங்களின் கீழ் வாடுகிறார்கள். இலங்கை அரசிடம் பணம் இல்லையா? உணவு இல்லையா? மருந்து இல்லையா? கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் ராணுவத்துக்காக வருடா வருடம் செலவழிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிடம் உதவி கேட்கவில்லை. பின் எதற்காக இன்று இந்திய அரசாங்கம் 800 டன் உணவுப் பொருள்களை அனுப்பிவைக்கிறது? எதற்காக தமிழ்நாடு பணத்தை மக்களிடம் திரட்டுகிறது. இதை யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்? அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேருமா? பழ.நெடுமாறன் சேர்த்த உணவுப் பொருட்களும், மருந்துகளும் ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னமும் போய்ச் சேராமல் அழிந்துவிட்டனவே.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஈழத்து மக்கள் குரல் இவர்கள் காதுகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் கேட்பது இதுதான்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அ) உலக தொண்டு நிறுவனங்களை திரும்பவும் அனுமதியுங்கள். அவர்களிடம் உணவுப் பொதிகளையும் பணத்தையும் கொடுத்தால் அது உரியவர்களிடம் போய்ச் சேரும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆ) இந்திய மண்ணில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டாம். இலங்கை ராணுவத்துக்கு போர் ஆயுதங்கள் கொடுக்க வேண்டாம். இலங்கைப் போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் பங்குபற்ற வேண்டாம். ஏழு கோடி தமிழ் சகோதரர்களை உள்ளடக்கிய இந்தியா, ஈழத்துத் தமிழர்களை அழிக்க நடக்கும் போரில் உதவி செய்யக் கூடாது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இ) இலங்கை அரசிடம் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் வழி என்று சொல்லி வரும் இந்திய அரசு தொடர்ந்து படை ஆயுதங்களும், ராணுவ, ஆள் உதவியும் வழங்குவதுதான் ஈழமக்களால் தாங்க முடியாததாக இருக்கிறது. தமிழகத்தில் இப்போது ஏற்பட்ட எழுச்சியும், ஒருமித்த ஆதரவும் ஈழமக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் பெரும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வேண்டும்தான். ஆனால் அது வந்து சேராது என்பது அவர்களுக்குத் தெரியும். முன்பு ஒருமுறை இந்தியா அனுப்பிய உணவு, மக்கள் இறந்தபிறகுதான் அங்கு போய்ச் சேர்ந்தது. ஈழ மக்கள் அதை &quot;வாய்க்கரிசிக்கு வந்த அரிசி&quot; என்றுதான் இப்பவும் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஓர் ஊடகவியலாளர் இப்படி வர்ணித்தார். &quot;எங்களுக்கு உணவு எதற்கு? ஆரோக்கியமாகச் சாவதற்கா? நாங்கள் கேட்பது சாவை நிறுத்த, பசியை நிறுத்த அல்ல.&quot; போர் நிறுத்தச் செய்திக்காகவே ஈழமக்கள் ஏங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இலங்கை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஓர் அதிகாரி என்னிடம் ஒருமுறை சொன்னார். &quot;விமானிகள் குண்டுகளை எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கிப் புறப்படுவார்கள். சிலவேளை இலக்கு கிடைக்காமல் திரும்ப நேரிடும். குண்டுகளுடன் திரும்பி வந்தால் மற்ற விமானிகள் கேலி செய்வார்கள். அதற்குப் பயந்து வழியிலே எங்கேயாவது தள்ளிவிடுவார்கள். இப்படிச் சாவு தினம் நடக்கிறது.&quot;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;800 டன் உணவும் 40 கோடி ரூபாயும் சாவை நிறுத்தப் போவதில்லை.&lt;/p&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-9</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-9</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 13:32:44 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>கன்னடர்களின் மொழிப்பற்று!</title>
			<description>&lt;h6 class=&quot;uiStreamMessage userContentWrapper&quot; data-ft=&quot;{&quot;type&quot;:1,&quot;tn&quot;:&quot;K&quot;}&quot; style=&quot;font-size: 11px; margin: 0px 0px 5px; padding: 0px; word-break: break-word; word-wrap: break-word; font-weight: normal; font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span class=&quot;messageBody&quot; data-ft=&quot;{&quot;type&quot;:3}&quot; style=&quot;color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 1.38; &quot;&gt;&lt;span class=&quot;userContent&quot;&gt;&lt;span class=&quot;text_exposed_link&quot; style=&quot;font-size: 11px; padding: 4px 12px 0px 0px; white-space: nowrap; display: block; &quot;&gt;&lt;h6 class=&quot;uiStreamMessage userContentWrapper&quot; data-ft=&quot;{&quot;type&quot;:1,&quot;tn&quot;:&quot;K&quot;}&quot; style=&quot;font-size: 11px; color: rgb(0, 0, 0); margin: 0px 0px 5px; padding: 0px; word-break: break-word; word-wrap: break-word; font-weight: normal; line-height: 14px; white-space: normal; &quot;&gt;&lt;span class=&quot;messageBody&quot; data-ft=&quot;{&quot;type&quot;:3}&quot; style=&quot;color:...</description>
			<content:encoded>&lt;h6 class=&quot;uiStreamMessage userContentWrapper&quot; data-ft=&quot;{&quot;type&quot;:1,&quot;tn&quot;:&quot;K&quot;}&quot; style=&quot;font-size: 11px; margin: 0px 0px 5px; padding: 0px; word-break: break-word; word-wrap: break-word; font-weight: normal; font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span class=&quot;messageBody&quot; data-ft=&quot;{&quot;type&quot;:3}&quot; style=&quot;color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 1.38; &quot;&gt;&lt;span class=&quot;userContent&quot;&gt;&lt;span class=&quot;text_exposed_link&quot; style=&quot;font-size: 11px; padding: 4px 12px 0px 0px; white-space: nowrap; display: block; &quot;&gt;&lt;h6 class=&quot;uiStreamMessage userContentWrapper&quot; data-ft=&quot;{&quot;type&quot;:1,&quot;tn&quot;:&quot;K&quot;}&quot; style=&quot;font-size: 11px; color: rgb(0, 0, 0); margin: 0px 0px 5px; padding: 0px; word-break: break-word; word-wrap: break-word; font-weight: normal; line-height: 14px; white-space: normal; &quot;&gt;&lt;span class=&quot;messageBody&quot; data-ft=&quot;{&quot;type&quot;:3}&quot; style=&quot;color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 1.38; &quot;&gt;கன்னடர்களின் மொழிப்பற்று!&lt;br&gt;தம்மொழியை நேசிப்பவர்&amp;nbsp;&lt;br&gt;மொழி வெறியரல்ல;&lt;br&gt;தன்மானம், சுயமரியாதை&lt;br&gt;உள்ளவர்கள்..!&lt;span class=&quot;userContentSecondary&quot;&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;div class=&quot;mvm uiStreamAttachments fbMainStreamAttachment&quot; data-ft=&quot;{&quot;type&quot;:10,&quot;tn&quot;:&quot;H&quot;}&quot; style=&quot;margin-top: 10px; margin-bottom: 10px; line-height: 14px; white-space: normal; &quot;&gt;&lt;div class=&quot;clearfix photoRedesign&quot; style=&quot;zoom: 1; width: 398px; &quot;&gt;&lt;a class=&quot;uiPhotoThumb photoRedesignAspect&quot; href=&quot;https://www.facebook.com/photo.php?fbid=379663295435101&amp;amp;set=a.116322175102549.16565.115109758557124&amp;amp;type=1&amp;amp;relevant_count=1&amp;amp;ref=nf&quot; data-ft=&quot;{&quot;type&quot;:41,&quot;tn&quot;:&quot;E&quot;}&quot; rel=&quot;theater&quot; ajaxify=&quot;https://www.facebook.com/photo.php?fbid=379663295435101&amp;amp;set=a.116322175102549.16565.115109758557124&amp;amp;type=1&amp;amp;relevant_count=1&amp;amp;ref=nf&amp;amp;src=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-ash4%2F387031_379663295435101_810406782_n.jpg&amp;amp;size=960%2C719&amp;amp;theater&quot; aria-label=&quot;புகைப்படம்&quot; style=&quot;cursor: pointer; color: rgb(59, 89, 152); text-decoration: none; border: 0px; display: block; float: left; position: relative; &quot;&gt;&lt;img class=&quot;img&quot; height=&quot;297&quot; src=&quot;https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/387031_379663295435101_810406782_n.jpg&quot; width=&quot;398&quot; alt=&quot;&quot; style=&quot;border: 0px; display: block; margin: 0px; max-width: none; &quot;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-6</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-6</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 12:13:06 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்</title>
			<description>&lt;h6 class=&quot;uiStreamMessage userContentWrapper&quot; data-ft=&quot;{&quot;type&quot;:1,&quot;tn&quot;:&quot;K&quot;}&quot; style=&quot;font-size: 11px; margin: 0px 0px 5px; padding: 0px; word-break: break-word; word-wrap: break-word; font-weight: normal; font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span class=&quot;messageBody&quot; data-ft=&quot;{&quot;type&quot;:3}&quot; style=&quot;color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 1.38; &quot;&gt;&lt;span class=&quot;userContent&quot;&gt;&lt;span class=&quot;text_exposed_link&quot; style=&quot;font-size: 11px; padding: 4px 12px 0px 0px; white-space: nowrap; display: block; &quot;&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;text_exposed_link&quot; style=&quot;font-size: 11px; padding: 4px 12px 0px 0px; white-space: nowrap; display: block; &quot;&gt;&lt;a class=&quot;uiPhotoThumb photoRedesignAspect&quot; href=&quot;https://www.facebook.com/photo.php?fbid=412473288813040&amp;amp;set=a.275783829148654.64159.210804085646629&amp;amp;type=1&amp;amp;relevant_count=1&amp;amp;ref=nf&quot; data-ft=&quot;{&quot;type&quot;:41,&quot;...</description>
			<content:encoded>&lt;h6 class=&quot;uiStreamMessage userContentWrapper&quot; data-ft=&quot;{&quot;type&quot;:1,&quot;tn&quot;:&quot;K&quot;}&quot; style=&quot;font-size: 11px; margin: 0px 0px 5px; padding: 0px; word-break: break-word; word-wrap: break-word; font-weight: normal; font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span class=&quot;messageBody&quot; data-ft=&quot;{&quot;type&quot;:3}&quot; style=&quot;color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 1.38; &quot;&gt;&lt;span class=&quot;userContent&quot;&gt;&lt;span class=&quot;text_exposed_link&quot; style=&quot;font-size: 11px; padding: 4px 12px 0px 0px; white-space: nowrap; display: block; &quot;&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;text_exposed_link&quot; style=&quot;font-size: 11px; padding: 4px 12px 0px 0px; white-space: nowrap; display: block; &quot;&gt;&lt;a class=&quot;uiPhotoThumb photoRedesignAspect&quot; href=&quot;https://www.facebook.com/photo.php?fbid=412473288813040&amp;amp;set=a.275783829148654.64159.210804085646629&amp;amp;type=1&amp;amp;relevant_count=1&amp;amp;ref=nf&quot; data-ft=&quot;{&quot;type&quot;:41,&quot;tn&quot;:&quot;E&quot;}&quot; rel=&quot;theater&quot; ajaxify=&quot;https://www.facebook.com/photo.php?fbid=412473288813040&amp;amp;set=a.275783829148654.64159.210804085646629&amp;amp;type=1&amp;amp;relevant_count=1&amp;amp;ref=nf&amp;amp;src=https%3A%2F%2Ffbcdn-sphotos-e-a.akamaihd.net%2Fhphotos-ak-ash4%2F485678_412473288813040_1693468585_n.jpg&amp;amp;size=480%2C315&amp;amp;theater&quot; aria-label=&quot;புகைப்படம்&quot; style=&quot;line-height: 14px; cursor: pointer; color: rgb(59, 89, 152); text-decoration: none; border: 0px; display: inline !important; position: relative; &quot;&gt;&lt;img class=&quot;img&quot; height=&quot;261&quot; src=&quot;https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/485678_412473288813040_1693468585_n.jpg&quot; width=&quot;398&quot; alt=&quot;&quot; style=&quot;border: 0px; display: block; margin: 0px; max-width: none; &quot;&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் முன்நாள்தலைவரும் தற்போதய சிறப்புத்தலைவருமான தமிழ்ச்செம்மல் செல்லையா காலமானார். உலகெங்கும் கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மேற்படி இயக்கத்தின் உலக மாநாட்டை சிறப்பாக நடத்தியும் அதனைத் தொடர்ந்து இயக்கத்தின் சிறப்புத் தலைவராக பொறுப்பேற்று தனது பணியை சிறப்பாக ஆற்றியும் வந்தவருமான கனடா வாழ் சின்னத்தம்பி செல்லையாவின் மறைவு உலகத் தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது மறைவினால் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது நல்லதோர் பண்பாட்டுச் செயற்பாட்டாளரை இழந்து தவிக்கின்றது”&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;இவ்வாறு கனடாவில் காலமான திரு சின்னத்தம்பி செல்லையாவின் மறைவையொட்டி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம், இயக்கத்தின் சர்வதேச ஊடகச் செயலாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள மேற்படி இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-&lt;/span&gt;&lt;wbr style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span class=&quot;word_break&quot; style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); display: inline-block; &quot;&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;ஷசுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது பல ஆசிய நாடுகளில் தனது கிளைகளை நிறுவி தமிழ் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் வட அமெரிக்காவிலும் இயக்கத்தின் கிளையொன்றை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இயக்கத்தின் அப்போதைய தலைவர் மலேசியா வாழ் திரு வீரப்பனாருக்கு தோன்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;அதன்படி 1996ம் ஆண்டளவில் கடனாவில் இயக்கத்தின் கிளையொன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பாடுகள் ஆரம்பமாகின. அப்போது கனடா வாழ் தமிழ் மக்கள் பலர் மிகுந்த ஆர்வத்தோடும் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்று காரணமாகவும் இயக்கத்தின் கிளையை ஆரம்பிக்கும் முதல் முயற்சிகளில் இறங்கி வேலைசெய்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;அப்போது நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆரம்பக் கூட்டங்களில் கலந்து கொண்டாலும், திரு சின்னத்தம்பி செல்லையா அவர்களே மேற்படி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பலரும் வியக்கும் வண்ணம் இவரது தெரிவு அமைந்தாலும் அவர் பிறர் வியக்கும் வண்ணம் தலைவர் பதவியிலிருந்து பணியாற்றுவார் என்பதை எதிர்பார்;க்கவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;காலங்கள் கடந்து சென்ற நிலையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மாநாடு ஒன்றை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரான ரொரென்ரோவில் நடத்த வேண்டும் என்ற தீர்மானம் அகிலச் செயற்குழுவால் எடு;க்கப்பட்டபோது, அதை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று முழக்கமிட்ட கிளைத் தலைவர் திரு சின்னத்தம்பி செல்லையா அவர்கள் அந்த மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;இது வரை தமிழ் மொழியின் முழக்கம் இடம்பெறாத ரொரொன்ரோ மாநகரின் மத்தியில் தமிழ் மொழியின் சிறப்புக்களை உச்சரித்த வண்ணம் 1996ம் ஆண்டு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் திரு சின்னத்தம்பி செல்லையா அவர்களே ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் அகிலத் தலைவராக இருந்து சிறந்த முறையில் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர் திரு சி. செல்லையா என்றால் அது மிகையாகாது.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;திரு செல்லையா அவர்கள் இலங்கையில் தான் வகித்த அரச நிர்வாக பதவிகள் மூலம் அடைந்த பதவியுயர்வுகள் எண்ணற்றவை. அமைச்சர்கள் பலரிடமிருந்து பெற்ற பாராட்டுக்கள் பல.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;இவ்வாறான அனுபவத்தோடு கனடாவிற்கு வந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் இணைந்து பின்னர் அதன் தலைவராகவும் சிறப்பு|த் தலைவராகவும் ஆற்றிய பணிகளை நமது மக்கள் அறிந்திரா விட்டாலும் அவை போற்றுதற்குரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;br style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;&lt;span style=&quot;color: rgb(51, 51, 51); font-family: &apos;lucida grande&apos;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 14px; background-color: rgb(255, 255, 255); &quot;&gt;அவரது மறைவினால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது”.&lt;/span&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-5</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-5</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 12:10:45 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>ஆய்வை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி!</title>
			<description>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;line-height: 22px; background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;கி.பார்த்திபராஜா&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;color: rgb(82, 82, 0); background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 22 JULY, 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/2011/sivathamby-940.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;Tami...</description>
			<content:encoded>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;line-height: 22px; background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; &quot;&gt;கி.பார்த்திபராஜா&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;color: rgb(82, 82, 0); background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 22 JULY, 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/2011/sivathamby-940.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;Tamil scholar Karthigesu Sivathamby researches comes to an end - Tamil Literature Ilakkiyam Papers&quot; title=&quot;Tamil scholar Karthigesu Sivathamby researches comes to an end - Tamil Literature Ilakkiyam Papers&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 10px 10px 0px 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மாமேதை கார்ல் மார்க்ஸ் இறந்தபோது, அவருடைய நண்பர் பிரடெரிக் எங்கெல்ஸ் &quot;மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்&quot; என்றாராம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இறந்தபோது, &quot;பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்&quot; என்று எழுதினார் கலைஞர். &quot;தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி&quot; - இப்படித்தான் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி மரணத்தைக் குறிப்பிட வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றித் தொடர்ந்து ஆய்வுச் செயல்பாட்டில் இருந்தவர் கா.சிவத்தம்பி. தன் வாழ்நாளில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சிவத்தம்பி, தமிழின ஆய்வுப் பரப்பைத் தனது நூல்களின் மூலம் விரிவாக்கியவர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;2000ஆம் ஆண்டில் தமிழக அரசு சிவத்தம்பிக்கு திரு.வி.க. விருதினை வழங்கிச் சிறப்பித்தது. விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய தமது உரையில், &quot;சுவாமி விபுலானந்தா, கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ, வையாபுரிப் பிள்ளை, கணபதிப்பிள்ளை, எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்&quot; என்று&amp;nbsp; தன்னடக்கத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்தார். அவையடக்கம் தமிழ் மரபுதான் அந்த அடக்கத்துக்குள் அவருடைய விரிவான ஆய்வுச் செயற்பாடுகள் கடலளவு பரந்து கிடக்கின்றன என்பதே உண்மை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;1932ஆம் ஆண்டு மே திங்கள் 10ஆம் நாள் டி.பி.கார்த்திகேசு, வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார் சிவத்தம்பி. பள்ளிப்படிப்பைத் தனது சொந்த ஊரான கரவெட்டியிலும் புகுமுக வகுப்பைக் கொழும்பு ஜாகிரா கல்லூரியிலும் பயின்றார். இளநிலைப் பட்டத்தை சிலோன் பல்கலைக் கழகத்தில் 1956இலும், முதுகலைப் பட்டத்தை அதே பல்கலைக்கழகத்தில் 1963இலும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வினை பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வாளர் ஜார்ஜ் தாம்சன் வழிகாட்டுதலில் &quot;பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்&quot; என்ற தலைப்பில் நிறைவு செய்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இலங்கையில் வித்யோதயா பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணி புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய தமிழகப் பல்கலைக்கழகங்களில் விருந்துநிலைப் பேராசிரியாராகப் பணிசெய்தார். மலேயா, பின்லாந்து, அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார். கா.சிவத்தம்பி தமிழியல் ஆய்வு உலகில், சிறப்பாக, தமிழர்களின் இலக்கிய வரலாற்றுத் துறையில் சிறந்து விளங்கினார். அவருடைய &quot;தமிழில் இலக்கிய வரலாறு&quot; குறிப்பிடத்தக்க ஆய்வு நூல். இலக்கிய வரலாற்றை அதன் தோற்றம், வகைமை, அரசியல் பின்புலத்துடன் ஆராயும் நூல் அது. இலக்கிய விமர்சனத்துறையிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். சிறுகதை, நாவல், கவிதை என அவர் இத்துறையில் விரிவாகச் செயல்பட்டார். காலனியக் காலம் மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தின் வரலாறெழுதியலில் கா.சிவத்தம்பி மிக முக்கியமான பங்காற்றினார். தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி, திராவிடக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, யாழ்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் என்பன போன்ற பல நூல்களை எழுதினார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழர்களின் பண்பாடு மற்றும் ஊடகச் செயல்பாடுகள் குறித்தும் மிக ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் அவர். நாவலும் வாழ்க்கையும், இலக்கணமும் சமூக உறவுகளும், தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும், தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு, யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும், யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், தமிழ்ப் பண்பாட்டில் கிறித்தவம், தமிழ்ச் சமூகமும் அதன் பண்பாட்டு மீள் கண்டுபிடிப்பும் ஆகியன அவரது மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வு நூல்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மேற்குறித்த ஆய்வுத் துறை மட்டுமல்லாது தொடக்கம் முதலே நாடக ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தி வந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழியல் ஆய்வில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இரட்டையர்கள் என அறியப்பட்டார்கள். இருவரும் ஜார்ஜ் தாம்சனின் மாணவர்கள். அவருடைய வழிகாட்டுதலில் கைலாசபதி, தமிழ்ச் சங்க இலக்கியத்தையும், கிரேக்க வீர யுகப் பாடல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். சிவத்தம்பி, சங்க நாடகத்தையும், கிரேக்க நாடக மரபையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். தான் ஜார்ஜ் தாம்சனிடம் மாணவனாகப் பயின்றமையைத் தன் வாழ்நாளின் இறுதிவரை பெருமையுடன் குறிப்பிட்டு வந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் தொன்மை மொழியாக, ஐரோப்பியர்களால் அடையாளங்காணப்பட்ட வடமொழிக்கு மாற்றாகத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்தியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியுமே ஆவர். தமிழ் நூல்களின் எண்ணிக்கைக்கு இணையாக சிவத்தம்பி ஆங்கிலத்திலும் நூல்களை எழுதினார். கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், தமிழ் எனப் பன்மொழிப் புலமை பெற்றவராக விளங்கினார் சிவத்தம்பி. எனவே உலக அரங்கில், தெற்காசிய அரங்கில் இந்திய அளவில் தமிழின் இடத்தை வற்புறுத்துவதில் அதனை நிலை நிறுத்துவதில் சிவத்தம்பி அறிவார்ந்த நிலையில் தங்குதடையின்றி வாதிக்க முடிந்தது. இலக்கியவியலைச் சமூகவியல், வரலாற்றியல், தொல்லியல், அறிவியல் எனப் பல்துறையோடு ஊடாட வைத்துப் புதிய ஆய்வு முறைமையையும் முற்றிலும் புதிய ஆய்வு முடிவுகளையும் உருவாக்கிக் காட்டியவர் சிவத்தம்பி.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சிறுகதை, நாவல் என்று நவீன இலக்கியத்திலும் பத்துப்பாட்டின் கவிதையியல், பண்டைச் சமூகவியல் என்று மரபிலக்கியத்திலுமாகத் தமிழின் விரிந்த பரப்பின் மீது சற்றும் அயராது பயணப்பட்டவர் அவர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் கருத்துநிலைப் போராளியாக அடையாளங் காணப்பட்டவர் சிவத்தம்பி. விடுதலைப் போராட்டத்தில் தலைமையிடம் வகித்த பலர் பேராசிரியரின் மாணவர்கள். எனவே சிவத்தம்பியின் கருத்துக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தனர். தங்களின் கருத்துநிலை, அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேராசிரியர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள் போராளித் தலைவர்கள். விடுதலை இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்துத் தயக்கமின்றி விமர்சனங்களையும் வெளியிட்டவர் சிவத்தம்பி.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழின விடுதலைப் போராட்டத்திற்கான சிங்கள அறிவுத்துறையினரின் ஆதரவைப் பெறுவதில் பெரும்பங்காற்றினார் அவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவு, சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் தமிழின அழித்தொழிப்பு பேராசிரியரிடம் மிகப்பெரிய மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தியிருந்ததாகப் பிந்தைய நாட்களில் அவரைச் சந்தித்தவர்கள் சொன்னார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இளம் எழுத்தாளர்களின் நவீனப் படைப்புகளையும் தொடர்ந்து வாசிக்கும் மாபெரும் படிப்பாளியாகவே அவர் எப்போதுமிருந்தார். தமிழகத்தின் இளம் ஆய்வாளர்களையும் அவர் தொடர்ந்து கவனித்தபடியே இருந்தார். தமிழகத்துக்கு வந்து கொழும்பு புறப்படும் பொழுதெல்லாம், ஏராளமான புத்தகச் சுமையுடனேயே பயணப்பட்டார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மரபிசை, தமிழிசை ஆகியனவற்றின் மீது தீராக் காதல் அவருக்கு எப்போதும் இருந்தது. காருக்குறிச்சி அருணாச்சலமும், டி.என்.இராஜரத்தினம் பிள்ளையும் தங்கள் நாதசுரத்தால் அவருடைய இயத்தை வருடியபடியே இருந்தார்கள். நடப்பதற்குச் சிரமமிருந்த போதிலும், தனது பருத்த தேகத்தைச் சுமந்தபடி மூச்சிரைக்க சென்னை இசையரங்குகளின் படிக்கட்டில் குழந்தையின் குதூகலத்துடன் கடந்து சென்றார். உணவாக இருந்தாலும், இசையாக இருந்தாலும் நூறு சதவிகிதக் கொண்டாட்டத்துடன் இரசிப்பவராக அவர் இருந்தார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தன்னையும் கைலாசபதியையும் தமிழக ஆய்வுப் புலத்தில் நிலைநிறுத்தியவர்கள் முற்போக்கு இலக்கியவாதிகளே என்பதைப் பல இடங்களில் கா.சிவத்தம்பி பதிவு செய்திருக்கிறார். &quot;நான் அடிப்படையில் ஒரு இயங்கியல்வாதி. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என் தள நோக்காக அமைவது. &apos;மாற்றம்&apos; இந்நோக்கு முறைமையில் அச்சாணியாக இடம்பெறும். நான் இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ள முனைகின்றேன். அவற்றைப் பொது உலக நோக்குக்குள் அமைத்துக் கொள்ள விரும்புகின்றேன்&quot; என்று தனது கலை இலக்கிய அரசியல் செயல்பாட்டை வெளிப்படப் பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர். ஒரு மார்க்சிய அறிஞராக, ஆய்வாளராக, மாற்றங்களை முன்மொழியும் ஒருவராகத் தமிழ் ஆய்வுலகு அவரை நினைவில் ஏந்தும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;முற்போக்கு முகாமில் மட்டுமல்ல, தமிழியல் ஆய்வுப் புலத்தில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு, பாரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. இவ்வெற்றிடத்தை இட்டு நிரப்புவது எளிய பணி அன்று.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;br&gt;நன்றி:&amp;nbsp;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கருஞ்சட்டைத் தமிழர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-4</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-4</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 12:03:35 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி!</title>
			<description>&lt;div class=&quot;span-20 last article_content_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; width: 790px; float: left; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;h1 style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; display: inline; line-height: 28px; font-size: 14px; color: rgb(68, 102, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி!&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_info_author_date&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; line-height: 22px; font-size: 15px; color: rgb(82, 82, 0); background-positi...</description>
			<content:encoded>&lt;div class=&quot;span-20 last article_content_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; width: 790px; float: left; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;h1 style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; display: inline; line-height: 28px; font-size: 14px; color: rgb(68, 102, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி!&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_info_author_date&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; line-height: 22px; font-size: 15px; color: rgb(82, 82, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழேந்தி&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 26 NOVEMBER, 2010&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/2010/big%20temple_nov26-886.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;The rational creed and caste behind Raja Raja Chozhan&apos;s fame - Tamil Literature Ilakkiyam Papers&quot; title=&quot;The rational creed and caste behind Raja Raja Chozhan&apos;s fame - Tamil Literature Ilakkiyam Papers&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 10px 10px 0px 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தமிழக அரசு கோவையில் நடத்திய &quot;உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு&quot; ஆரவாரங்கள் இன்னும் அடங்கவில்லை. ஆனால், விழா நடத்திக் களிப்பதில் வித்தகரான இன்றைய முதல்வர், தற்பொழுது தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழாவை (செப்டம்பர் 22 அன்று தொடங்கி 26 வரை) அமர்க்களமாய்க் கொண்டாடி இருக்கிறார். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், சாதி சண்டைகள், சமயப் பூசல்கள் போன்ற பல்வேறு சுமைகளின் பாரம் தாங்காமல் - தமிழனின் முதுகெலும்பே முறிந்து போகும் நிலையில் இவையெல்லாம் எதற்காக? வீழ்ந்து கிடக்கும் தமிழினம், மாமன்னன் ராசராசனின் வெற்றிப் பெருமிதங்களின் நினைவூட்டலால் தலைநிமிரும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்விழா நடத்தப்பட்டதா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ராசராசனின் பெயரை விண்ணளவு உயர்த்திக் காட்டும் கலைப்பெட்டகமாய் இன்றளவும் உயர்ந்து நிற்பது தஞ்சைப் பெரிய கோயில். ராசராசனின் ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளில் பலருக்கும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைத் திறனுக்கு சான்றாய் தனிச் சிறப்போடு நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கி.பி. 1009இல் இவன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி. அக்கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கல் 80 டன் எடை கொண்டதாகும். 25.5 அடி சதுரம் உடைய அந்த ஒற்றைக் கல்லை கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல 10 கி.மீ. தொலைவுக்கு சாரங் கட்டித்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இன்றைக்கும் தஞ்சை அருகே &quot;சாரப்பள்ளம்&quot; என்கிற ஊர் உள்ளது. இரும்பும், சிமெண்டும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகிலமே வியக்கின்ற இந்த அருஞ்செயலைச் செய்து முடித்த நம் தமிழ் முன்னோர்களின் ஆற்றல்சால் கட்டடக் கலைத்திறன் போற்றுதற்கு உரியதே!&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆனால், இவ்வளவு பெரிய அறிவு நுட்பமும் கலைத் திறனும் கொண்ட அந்தக் கால உழைப்புச் சமூகத்தின் உள்ளார்ந்த வாழ்நிலை என்ன? வான் முட்ட எழுந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கடைக்காலில் புதைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் கண்­ணீரும் செந்நீரும் - இந்த ஆயிரமாம் ஆண்டு விழா ஆர்ப்பாட்டப் பேரிரைச்சலில் நம்மால் அடையாளம் காணப்படுமா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சாதிப் பிரிவுகள் அற்றுச் சமத்துவ வாழ்வு வாழ்ந்த தொல் தமிழ்க் குடியில், தொல்காப்பியர் காலத்திலேயே பிளவுகள் தொடங்கி விட்டன. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்கிற நால்வகைப் பிரிவும் செய்யுந் தொழிலின் அடிப்படையில்தான் முதலில் அமைந்தது. பின்னர் அதுவே சாதியச் சழக்காய் நிலைத்து விட்டது என்று சமூக ஆய்வாளர்கள் சிலர் எழுதுகின்றனர். ஆனால், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நூலே கரகம் முக்கோல் மணையே&lt;br&gt;ஆயுங் காலை அந்தணர்க் குரிய&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;- தொல். பொருள். மரபியல் 66&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;முப்புரி நூல் (பூணூல்), தண்ணீ­ர் சொம்பு, முக்கோல், அமர்வதற்கான இருக்கை ஆகிய அந்தணர்க்குரியன என்பது இதன் பொருள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;- தொல். பொருள். அகத்திணையியல் 28&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;என்கிற நூற்பா, &quot;ஓதுதல்&quot; ஆகிய &quot;கல்வி&quot; என்பது, உயர்ந்தோரான அந்தணர்க்குதான் உரியது என்று சொல்லப்பட்டுவிட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இதன் தொடர்சியானது, பின் நாட்களில் பாறைபோல் கெட்டிப்பட்டுப் பிற்கால சோழப் பேரரசில் அசைத்துப் பார்க்கவே முடியாத பார்ப்பன மநுதரும ஆட்சியாகவே நிலைத்துவிட்டது. ராசராசன் காலத்தில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுப் பார்ப்பனர்கள் அலையலையாக இங்கே இறக்குமதி செய்யப்பட்டனர். தமிழ் நாட்டுக் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மடங்கள் ஆகியவற்றில் அந்தப் பார்ப்பனர்கள் - அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் அமர்த்தப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வேத நெறியைத் தழைத்தோங்கச் செய்ய, சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவாரி வழங்கினார்கள். அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தனி நிலங்களும், முழு முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அவ்வாறு அரசர்களால் வழங்கப்பட்ட பார்ப்பனக் கிராமங்கள் - அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேயம் என்கிற பெயர்களில் செல்வச் செழிப்போடு விளங்கின. அந்தக் கிராமங்களில் அரசனின் ஆணைகள்கூட செல்லுபடி ஆகா. எவ்வகையான வரிகள், கட்டணங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்தும் அவற்றுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ராசராச சோழன், அவன் மகன் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் என நீளும் பிற்காலச் சோழர் ஆட்சியில், உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து மிகக் கொடிய முறையில் பல்வேறு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இருந்துதான் விண்முட்ட ஆலயங்கள் எழுப்பப்பட்டன. மநுதர்ம விதிகள் சட்டமாக்கப்பட்டன. பார்ப்பனர்கள் கேட்டவை கேட்டபடி அளிக்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சோழர் கால ஆட்சிச் சிறப்புகள் பலவற்றுள் ஒன்றாகச் சொல்லப்படுவது அவர்கள் நாடு, கூற்றம் என தம் ஆட்சிப் பரப்பைப் பல உட்கூறுகளாகப் பிரித்து ஆண்டார்கள் என்பதாகும். நிலங்களை அளந்து நாட்டைப் பகுத்தமையும், ஊர்ச்சபைகள் அமைத்துக் குடிமக்கள் நலன் காத்தமையும் சிறப்பாகப் பேசப்படுகிறது. சோழர் காலத்துக் குடவோலை முறை, பள்ளிப் பாடநூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு செய்தியாகும். இதுபற்றி உத்தரமேரூர்க் கல்வெட்டுகளில் பின் காணப்படுவன:&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&quot;உத்தரமேரூர் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். அவ்வாறு குடும்புகளால் நியமனம் பெறுவோர் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பதின்மர் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓலை நறுக்குகளில் பெயர்கள் எழுதப்படும். அவை ஒரு குடத்தில் இடப்பட்டுக் குலுக்கப்படும். பின் சபைக்குத் தேவைப்படும் உறுப்பினர்களை, ஒரு சிறுவனை ஏவி கைவிட்டு எடுக்கச் செய்வர்&quot;. இந்த முறையில் அமைந்த குடிநாயக மாண்பைப் பெருமையாகப் பேசுவோர் ஒன்றை மறைத்து விடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கிராம நிர்வாகத்தில் முதன்மைப் பாங்காற்றும் அந்த முப்பது உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளாக, உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் உரைப்பன யாவை?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு கால்வேலி நிலமாவது இருக்க வேண்டும். சொந்தமாய் வீட்டுமனை இருக்க வேண்டும். 35 வயதிற்குக் குறையாமலும் 70 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டிய அவர்களுக்குரிய மிகமிக முதன்மையான தகுதி, அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட மந்திர பிராமணங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதத்தை ஓதும் திறனைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மேற்காணும் ஊர் உறுப்பினர்களின் தகுதிகளில் இருந்து சோழர் கால கிராம ஆட்சி என்பது யாரால், யாருடைய நலனுக்காக நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, சோழர் கால மெய்கீர்த்திகள் அனைத்திலும் அம்மன்னர்கள் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதையே தம் சீரிய அரச கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆரிய ஒழுக்கங்களைப் பாராட்டும் சாத்திரங்களும் புராணங்களுமே நாடு முழுவதும் கற்பிக்கப்பட்டடுள்ளன. அரசர்கள் அமைத்த கல்வி நிறுவனங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மாறாக, இதிகாசங்கள், சிவதருமம், ராமநுசபாடியம், மீமாமிசை, வியாகரணம் போன்ற வடமொழி இலக்கிய இலக்கணங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சோழர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிழை இல்லாமல் தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சோழர் காலத்துக் கல்வெட்டுகள், எழுத்துப் பிழைகள் மலிந்தனவாய்க் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால், அந்தக் கல்வெட்டுகளை செதுக்கிய கல்தச்சர்கள் குறைந்த எழுத்தறிவு கொண்டவர்களாய் இருந்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி போன்ற பெரும்பெரும் தமிழ்ப் புலவர்கள் - பல்லவர் மற்றும் சோழர் ஆட்சிக் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலத்தில் எழுதப்பட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பலவும் வடமொழிக் கலப்பை மிகுதியாகக் கொண்டிருந்தன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழினத்திற்கே பெரும் தலைக்குனிவாய் உள்ள சாதி வேற்றுமைகள் பல்கிப் பெருகி வேர்விட்டது சோழர்கால ஆட்சியில்தான் என்பது, வரலாறு பதிவு செய்து வைத்துள்ள மாபெரும் உண்மையாகும். வேளாளர், பிள்ளைமார் முதலியோரும், செட்டிமார்களும் மற்றவர்களைவிட தாம் உயர்ந்தோர் என்றும், பார்ப்பனர்க்கு அடுத்த நிலையுடையவர்கள் தாம் தாம் என்றும் தருக்கி வாழ்ந்தது, சோழர் கால ஆட்சியில் கெட்டிப்பட்டுப்போன பெருங்கேடாகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வரலாற்றில் மாறாத வடுவாக நிலைத்துவிட்ட வலங்கை இடங்கைக் குலங்களின் குருதி சிந்திய போராட்டங்கள் பற்றி கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&quot;சோழர் காலத்தில் ஓங்கி வளர்ந்த குல வேறுபாடுகள், மிகவும் தீய விளைவுகளுக்கு களனாக இருந்தது வலங்கை - இடங்கை என்னும் பிளவாகும். இவ்விரு பிரிவினருக்கும் இடையே பல கடும் பூசல்கள் நேரிட்டுள்ளன. இப்பூசல்கள், சோழப் பேரரசின் காலத்திற்கு முன்னே தோன்றி, விசயநகரத்துப் பேரரசர்கள் காலத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்து - ஆங்கிலேயர் அரசாட்சியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் நடைபெற்று வந்தன. சென்ற நூற்றாண்டில் இப்பூசல்களின் காரணமாக சென்னையின் தெருக்களில் மனித ரத்தம் சிந்தியதுண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை - இடங்கை வேறுபாடுகள் திடீரென்று மறைந்துவிட்டன. இப்போது மக்களுக்கு அப்பெயர்களின் பொருளே இன்னதென விளங்குவதில்லை. இந்த வேறுபாட்டை வரலாற்று நூல்களின் பக்கங்களில்தாம் விளங்கக் காண்கின்றனர். ஒன்பது நூற்றாண்டுகளாகத் தமிழரின் வாழ்க்கையை அலைக்கழித்து வந்த சமூகக் கேடு ஒன்றன் தோற்றமும் முடிவும் வரலாற்று விளக்கங்காணாத மறைபொருள்களாகவே உள்ளன&quot;. (&quot;தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்&quot; - பக். 321)&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சோழர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டிய பெண்கள் பலரையும் கோயில்களில் தேவரடியார்கள் ஆக்கிய பீடு மிக்கப் பெரும் பணியைச் செய்தவன் மாமன்னன் ராசராசன் ஆவான். இன்று ஆயிரமாம் ஆண்டு காணும் இதே தஞ்சைப் பெருவுடையார்க் கோயில் திருத் தொண்டுக்காக, ராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான். அவர்களுக்குத் தனித்தனியே வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்று தஞ்சைக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தில், பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையும் நடந்துள்ளது என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு என்று பெருமை பேசப்படுகிறது. ராசராச சோழனுக்கு உலோகமாதேவி, சோழமாததேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வல்லவன்மாதேவி, வனவன்மாதேவி எனப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர் என, வே.ஆனைமுத்து தாம் எழுதிய &quot;தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி&quot; என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இயற்கை சார்ந்த நேரிய வாழ்வும், நெடிய வரலாறும், நிறைந்த இலக்கியச் செல்வங்களும் பெற்ற ஒப்பற்ற இனமாகத் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், உண்மையான இயங்கியல் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாற்றை அணுகுவதும், மீள் ஆய்வு செய்வதும் மிகமிக இன்றியமையாததாகும். தமிழர் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்த வர்ணாசிரம ஆதிக்கம், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம், உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடிய சுரண்டல் போன்ற அழிக்க முடியாத வரலாற்றுக் கறைகளைப் பிற்காலச் சோழர் ஆட்சி, மிகமிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவப் பொதுமைச் சமூகத்தை தமிழ் மண்ணில் அமைத்திட முயலும் யார்க்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு விழா, எந்த வகையிலும் நிறைவைத் தராது என்பது உறுதி!&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சோழர் காலத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டாயமாக பெறப்பட்ட வரிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மீன்பாட்டம்: மீன்பிடி தொழிலுக்கு மீனவர் செலுத்திய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வட்டி நாழி: கழனிக்குத் தண்ணீ­ர் பாய்ச்சிய நாழிகையைக் கணக்கிட்டு அதன்படி உழவர்கள் செலுத்திய தண்­ர் வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கண்ணாலக் காணம்: திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வண்ணாரப்பாறை: துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;குசக்காணம்: குயவர்கள் (மண்பாண்டம் செய்வோர்) செலுத்திய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தறிக் உறை: தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தரகுப்பட்டம்: தரகர்க்கு விதிக்கப்பட்ட வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆட்டுக்கறை: ஆடு வளர்ப்பவர் செலுத்த வேண்டிய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நல்லெருது: எருது, பசு வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஓடக் கூலி: ஓடம் செலுத்துவோர் கட்டிய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஈழம் பூட்சி: கள் இறக்குவோர் செலுத்திய வரி&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;- கே.கே. பிள்ளை எழுதிய &quot;தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்&quot;, பக். 314, 315 வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வெட்கங்கெட்ட ராசராசன்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராசராசனுக்கு, அக்கோயிலுக்கு உள்ளே சிலை வைக்க - அன்றும் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முயன்றபோது, அதற்கு மத்திய தொல் பொருள் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் கோயிலுக்கு வெளியே அச்சிலையை முதல்வர் நிறுவினார். இப்பெருங்கோயிலைக் கட்டிய ராசராசன், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவன் சூத்திரன் என்பதால், அக்கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு அவனுக்கு அனுமதியில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;அரசப்பெருமிதங்களில் கரையும் இன்றைய ராசராச சோழன்களுக்கும் அதுதான் நிலை! ஆனால், இதுகுறித்து ராசராசனும் வெட்கப்படவில்லை; ஆயிரமாண்டுகள் கடந்தும் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டு, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராமல், கோயில் கட்டடப் பெருமிதங்களில் திளைக்கும் தமிழ்ச் சமூகமும் வெட்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நன்றி:&amp;nbsp;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தலித் முரசு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-3</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-3</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 12:01:47 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>தொடரும் மொழிப்போர்...</title>
			<description>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;h1 style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; display: inline; line-height: 28px; font-size: 14px; color: rgb(68, 102, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தொடரும் மொழிப்போர்...&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_info_author_date&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; line-height: 22px; font-size: 15px; color: rgb(82, 82, 0); font-family: Times; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இரா.சிவக்குமார்&lt;/span&gt;&lt;span class=&quot;english_sm...</description>
			<content:encoded>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;h1 style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; display: inline; line-height: 28px; font-size: 14px; color: rgb(68, 102, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தொடரும் மொழிப்போர்...&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_info_author_date&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; line-height: 22px; font-size: 15px; color: rgb(82, 82, 0); font-family: Times; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இரா.சிவக்குமார்&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 3 MARCH, 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/2011/mozhippor-919.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;Strive to Save Tamil - Tamil Literature Ilakkiyam Papers&quot; title=&quot;Strive to Save Tamil - Tamil Literature Ilakkiyam Papers&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 10px 10px 0px 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. &quot;ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு&quot; எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணியப்படுத்திக் கொண்ட கழக இலக்கியங்களும், காப்பியங்களுமே முதன்மைக் காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நின்று பகர்கின்றன. கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. &quot;தீதும் நன்றும் பிறர் தர வாரா&quot; என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் எதார்த்தத்தை வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. இதற்கிடையே, நேற்றுப் பிறந்த மொழிகளோடும், அதற்கு முந்தைய நாள் பிறந்த மொழிகளோடும் ஒப்பிட்டு, தமிழின் செம்மொழிப் பெருமையைக் கீழிறக்கும் செயல்களும் நம் கண் முன்னே அரங்கேற்றப்படுகிறது என்பதையும் நாம் கணக்கிலே கொண்டாக வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்து இப்போதுள்ள இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி மாணாக்கர்கள், போர்க்குணத்துடன் தாங்கள் எண்ணிய இலக்கு ஈடேறுவதற்காக, மண்டை உடைந்து, கை கால் ஒடிந்து, குருதி சொட்ட, உயிர் ஈகம் செய்த வரலாறு, தமிழகத்தின் கருஞ்சிவப்புப் பக்கங்களாகும். 1965ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்த காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னெழுச்சியாய் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கதறக் கதற லத்தியால் அடித்த அடியை எவராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அன்று அடி வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று திராவிடக் கட்சிகளின் பல்வேறு பொறுப்புகளிலும், பல தமிழ்த் தேசிய அமைப்புகளிலும் வாழும் சான்றாக தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம், அப்போது மொழியுணர்வோடும், இனவுணர்வோடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்திய நாடு விடுதலையடைவதற்கு முன்பாக அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ மற்றுமுள்ள தமிழறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். இதற்கிடையே முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுசாமி என்பார் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராகக் கைதானார். அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இந்தி மொழி எதிர்ப்பிற்காக நடராசன் கைது செய்யப்பட்டார். சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளான நடராசன், 1939ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள் இறந்துபோனார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்த முதல் போராளி இவர். தர்மாம்பாள், நாராயணி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட பெருமளவிலான பெண்களும் இப்போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கைக்கு ஆளாயினர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்தித் திணிப்பிற்கு ஆதரவான அரசின் முயற்சிகளுக்கு 1938ஆம் ஆண்டு இராஜாஜி வித்திட்டாரென்றால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோன நடராசனின் இறப்பை இராஜாஜி, பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்தார். இரண்டாவது மொழிப் போராட்டமாய்க் கருதப்படும் 1948ஆம் ஆண்டிலும் அதே காங்கிரஸ் அரசு, முதல்வராய் அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி மூலம் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. அப்போதும் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, திரு.வி.க., பாரதிதாசன், தருமாம்பாள் என பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் போராட்டங்கள் பல நடத்தி சிறை புகுந்தனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியா தனக்கென்று அரசியல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக் குழு இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த கலந்துரையாடலை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. அரசியலமைப்பு அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். இதில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் தனது ஓட்டை இந்திக்கு ஆதரவாகப் பதிவு செய்ததால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத நிலையில் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. 1950 சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 17ஆவது பிரிவின் கீழ் இந்தி, நடுவணரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போரில் முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து பல்வேறு பேராட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இதழ்களிலும், வேறு பல ஏடுகளிலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் மக்களவையில் பிரதமர் நேரு, &quot;இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்&quot; என்று உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக மூன்றாவது மொழிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்காவது மொழிப்போர், இரத்தம் சிந்திய போராட்டமாக அமைந்துவிட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியே இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் நாள் கொண்டு வந்த ஆட்சி மொழி குறித்த சட்ட முன்வரைவு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பின. இதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளித்தது. அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் பரவின.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான பெரும் போரில் சிறிதும் தயக்கமின்றி குதித்தனர். காங்கிரஸ் தலைமையிலான பக்தவச்சலம் அரசு மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. தமிழகக் காவல்துறை, மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்தத் காங்கிரஸ் தொண்டர்களைத் தயார் செய்து, ஆங்காங்கே மாணவர்கள் மீது உருட்டுக் கட்டைகளால் தாக்கியது என வரலாறு காணாத அளவில் பெரும் வன்முறைக் காடாக தமிழகத்தை மாற்றிக் காட்டியது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த நெடும் போராட்டத்தில் தான் வெறும் 21 வயதே ஆன கீழப்பழுவூர் சின்னச்சாமி, திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக &quot;இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!&quot; என்று முழக்கமிட்டு, தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மதுரையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில், திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் அரசு, மாணவர்களை ஓட, ஓட அடித்து விரட்டியது. அதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 1965 சனவரி 26ஆம் நாள் சிவலிங்கம் என்ற திமுக தொண்டர், சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து இறந்து போனார். மொழிக்காக உயிரை ஈந்த இத்தியாகப் போராட்டத்தை பக்தவச்சலம், சட்டமன்றத்தில் மிக இழிவாகப் பேசினார். பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தீக்குளித்து இறத்தல் தொடர்கதையாகின. 1965ஆம் ஆண்டு ஐம்பது நாட்கள் நடைபெற்ற நான்காவது மொழிப் போராட்டத்தில், காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட வன்முறையின் காரணமாய் சற்றேறக்குறைய 500 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தையும் அப்போதிருந்த இளைஞர்களும், மாணவர்களுமே பெரும் எழுச்சியோடு நடத்தினர். நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தமிழ் மொழியைக் காப்பாற்றினாலும் கூட, நடுவணரசின் மறைமுக வேலைத்திட்டமும், மாநிலக் கட்சிகளின் கையாலாகாத்தனமும் இந்தியை கொஞ்சம், கொஞ்சமாய் தமிழகத்திற்குள் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறது. &quot;அனைவருக்கும் கல்வி&quot; என்பதைக் காட்டிலும் &quot;சர்வ சிக்ச அபியான்&quot; வெகு இயல்பாக புழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள நடுவண் அரசின் அனைத்துத் துறைகளும் இந்தியை மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றன. நடுவண் அரசின் காப்பீட்டுத் திட்டங்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அறிஞர் அண்ணா, &quot;மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த மொழிப்போர் முடிவிற்கு வரும்&quot; என்றார். அந்த நிலை அய்யாவால் சாத்தியமாகுமா..? அல்லது அம்மாவால் சாத்தியமாகுமா..? என்பது இன்னமும் விளங்காத புதிர்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மொழிப் போராட்டத்தை கையிலெடுத்து, ஆளும் உரிமையைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் மொழி, இன உணர்வைக் காப்பாற்ற தன்மரியாதையோடு செயல்படத் தொடங்கும் நாள் எந்நாளோ? இரு கழகங்களின் ஆட்சியில் தான் ஆங்கில வழியிலான நர்சரிப் பள்ளிகள் வெகு வேகமாக வளர்ந்தன. தமிழ் உரையாடல்கள் அவ்வப்போது தலைகாட்டும் வண்ணம் தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சி விரைவடைந்ததும் கழகங்களின் காலத்தில்தான். தற்போது கிரந்த எழுத்துக்களைக் கொண்டு தமிழ்மொழியின் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சியைத் தடை செய்கின்ற முயற்சியும் திமுகவின் காலத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் மொழியை உச்சரிக்கும் திறனற்று, ஆங்கில மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மனநிலையை ஊக்குவித்தது திமுகவும் அதன் அரசியல் எதிரியான அதிமுகவும்தான்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழ்வழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற திமுக அரசின் அறிவிப்பிற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெறுகின்ற அளவிற்கு தமிழ் மொழிக்கெதிரான செயல்பாடுகள் அப்பட்டமாகவே தமிழகத்தில் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற, ஆளப்போகின்ற கழக அரசுகள் என்ன சொல்லப் போகின்றன? அண்டை மாநிலங்களான மராட்டியமும், கன்னடமும், மலையாளமும் தனது தாய்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்காற்றுகின்ற போது, தமிழகத்தால் மட்டும் இயலாமற்போனது ஏன்? மொழி வழி தேசியம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டு, அண்டைத் தேசிய இனங்கள், அதனதன் மாநிலத்திற்குள் ஒன்று சேரும்போது தமிழகத்தில் மட்டும் அவ்வாறு இயலவில்லையே என்ன காரணம்? முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற உயிராதாரச் சிக்கல்களில் கூட தமிழர்களால் ஒன்று பட இயலாமற் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது? இவையனைத்திற்கும் காரணம் தன்னல அரசியலன்றி வேறு எது?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;முதல் பத்து இடத்தில் தமிழ்மொழி!&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உலகின் மிகப் பிரபலமான அகரமுதலிகளுள் முதன்மை இடத்தை வகிக்கும் விக்கி அகரமுதலி தனது அடையாள முத்திரையில் தமிழையும் இடம் பெறச் செய்துள்ளது. தற்போது விக்கி அகரமுதலியில் (&lt;a href=&quot;http://www.wiktionary.org/&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: none; padding: 0px; text-decoration: none; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;http://www.wiktionary.org/&lt;/a&gt;) மட்டும் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் சொற்கள் இடம்பெற்று முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் இடம் பெற்றுள்ளது (&lt;a href=&quot;http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: none; padding: 0px; text-decoration: none; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics&lt;/a&gt;). இந்திய மொழிகளுள் எவையும் இந்த இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழில் பேச உறுதியேற்போம்!&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இன்று கணினியில் தமிழ் கோலோச்சுவதற்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஈழத் தமிழர்களுமே மிக முக்கியக் காரணம். மொழிப் போராடத்தை தீவிரமாக நடத்திக் காட்டிய தமிழ் மண்ணில் பிறந்தோர் தற்போது ஒரு சொற்றொடரைக் கூட முழுமையாகத் தமிழில் பேச இயலவில்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆளுகின்ற அரசுகளின் பலவீனமே! இந்தி மொழிப்போர் ஈகியர் நாளிலாவது நாம் அனைவரும் தாய்மொழியில் உரையாட உறுதியேற்போம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நன்றி:&amp;nbsp;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கீற்று&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-2</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-2</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 11:56:20 GMT</pubDate>
		</item>
		<item>
			<title>தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து</title>
			<description>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;h1 style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; display: inline; line-height: 28px; font-size: 14px; color: rgb(68, 102, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_info_author_date&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; line-height: 22px; font-size: 15px; color: rgb(82, 82, 0); font-family: Times; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழ்த் தேசம் செய்தியாளர்&lt;/span&gt;&lt;sp...</description>
			<content:encoded>&lt;div class=&quot;article_title&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-family: Times; font-size: medium; line-height: 24px; &quot;&gt;&lt;h1 style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; display: inline; line-height: 28px; font-size: 14px; color: rgb(68, 102, 0); background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_info_author_date&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; line-height: 22px; font-size: 15px; color: rgb(82, 82, 0); font-family: Times; &quot;&gt;&lt;span class=&quot;disp_author&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; color: rgb(0, 102, 0); font-size: 10px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;தமிழ்த் தேசம் செய்தியாளர்&lt;/span&gt;&lt;span class=&quot;english_small_txt&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; font-size: 10px; line-height: normal; font-family: tahoma; text-transform: uppercase; &quot;&gt;&amp;nbsp;- 3 MARCH, 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;article_text&quot; style=&quot;background-color: rgb(255, 255, 255); border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px 20px 0px 10px; line-height: 18px; font-size: 12px; font-family: Times; &quot;&gt;&lt;img src=&quot;http://www.koodal.com/contents_koodal/article/images/2011/tamil%20language-918.jpg&quot; align=&quot;left&quot; alt=&quot;Pure Tamil&apos;s Unique Identity ruined by Grantha letters - Tamil Literature Ilakkiyam Papers&quot; title=&quot;Pure Tamil&apos;s Unique Identity ruined by Grantha letters - Tamil Literature Ilakkiyam Papers&quot; style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 10px 10px 0px 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் &apos;கிரந்த எழுத்துகள்&apos; எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;1) கிரந்த எழுத்துகள்: நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம். இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது - உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;மலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி? இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும், சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச் சேர்த்தியம் (வாந ரு—&amp;euro;உழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;Basic Multilingual Plane- BMP&lt;/strong&gt;) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன. (2) துணைப் பன்மொழித் தளத்தில் (&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;Supplementary Multingual Plane - SMP&lt;/strong&gt;) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் பன்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;Supplementary Ideographic Plane&lt;/strong&gt;) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;எல்லாத் தளங்களிலும் சேர்த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் &apos;சஞ்ஜய்&apos; ஆகி விடுகிறார். சங்கர் &apos;ஷங்கர்&apos; ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை &apos;குறிஞ்ஜி வொய்ன்ஸ்&apos; பருக அழைக்கிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;குறிஞ்சி கிரந்த போதையால் &apos;குறிஞ்ஜி&apos; ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் - குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து &apos;மஞ்ஜள்&apos; ஆனாலும் அஞ்சற்க (&apos;அஞ்ஜற்க&apos;வோ)! கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி &apos;இளைய தளபதி விஜய்&apos; என்று கொண்டாடுகிறது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை! இதற்கான முன்மொழிவை &apos;உத்தமம்&apos; என்ற அமைப்பு அனுப்பியதாம்! அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா.கணேசன் இதற்குத் தூண்டுதலாம்! இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம்! ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா.கணேசன்!&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உத்தமமும் நா.கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிரந்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் &apos;தமிழ் நீட்சி&apos; என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம், சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் &apos;தமிழ் நீட்சி&apos; முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. &apos;தமிழ் நீட்சி&apos; முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு.மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி விட்டார்கள்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;எப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் &apos;தமிழ் நீட்சி&apos;யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்குக் காரணம் நா.கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (—), ஒகர உயிர்மெய்க் குறி (— - ‘) ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் - கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு. ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;கிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா.கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா.கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம.கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;இம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. &apos;ஒருங்குறித் தமிழ் - மெய்யும் மீட்பும்&apos; என்ற அறிவூட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக.இளங்கோவன், இராம.கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;ஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது: தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன்? ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்... இது என்ன கூத்து? ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு? ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும், செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா? இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையில்லையா? தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா?&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;உலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே! தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 5px 0px; line-height: 24px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;நன்றி:&amp;nbsp;&lt;strong style=&quot;background-color: transparent; border: 0px; margin: 0px; outline: rgb(0, 0, 0); padding: 0px; background-position: initial initial; background-repeat: initial initial; &quot;&gt;சமூகநீதித் தமிழ்த் தேசம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;</content:encoded>
			<link>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-1</link>
			<dc:creator>magickousi</dc:creator>
			<guid>https://tamilpittan.ucoz.org/blog/2012-09-12-1</guid>
			<pubDate>Wed, 12 Sep 2012 11:07:27 GMT</pubDate>
		</item>
	</channel>
</rss>